Skip to main content

நள்ளிரவு பூஜையில் சாமியாருக்கு கத்தி குத்து; செஞ்சி அருகே பரபரப்பு

Published on 29/08/2023 | Edited on 29/08/2023

 

preacher was stabbed during a midnight pooja near Senchi

 

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள பெருங்காப்பூர் கிராமத்தின் காட்டு பகுதியில் பிரசித்தி பெற்ற காளி கோயில் ஒன்று உள்ளது. இந்த காளி கோயிலில் நள்ளிரவு நேரத்தில் அவ்வப்போது பூஜை வழிபாடு நடக்கும். அதில் கலந்து கொள்ள ஏராளமான பக்தர்கள் வெளியூர்களில் இருந்து வருவது வழக்கம். இந்தக் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இரவு நேரங்களில் அருள்வாக்கு கேட்பார்கள். இந்தக் கோயிலில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் கண்ணன் மற்றும் கணபதி என இருவரின் தோப்புகள் உள்ளன. 

 

இந்நிலையில் கணபதி, தனது தோப்பை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் அதிகாலை வேளையில் சென்றுள்ளார். அப்போது அவரது தோப்பின் பக்கத்து தோப்பான கண்ணன் என்பவரின் தோப்பில் இருந்து முனகல் சத்தம் கேட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கணபதி, அந்த இடத்திற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது சாமியார் கோலத்தில் இருந்த ஒரு மனிதர் குடல் சரிந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

 

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கணபதி, உடனடியாக சத்தியமங்கலம் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். அந்தத் தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த சாமியாரை மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அந்த நபர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. 

 

இந்நிலையில், சிகிச்சை பெற்று வரும் அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவர் பெர்யர் சரவணன்(42) என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டம், ஆரடப்பட்டு கிராமப் பகுதியில் கெளரி வாக்கு மையம் நடத்தி வந்துள்ளார். இவர், அவ்வப்போது பெருங்கப்பூர் காளி கோயிலுக்கு வருகை தந்து நள்ளிரவு பூஜையின் போது பக்தர்களுக்கு அருள் வாக்கு சொல்வது வழக்கம். அதன்படி அன்று இரவு கோவிலுக்கு வந்த சாமியார் சரவணன், இரவு 10 மணி வரை பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறிவிட்டு பிறகு கண்ணன் என்பவர் தோப்பு பகுதியில் நள்ளிரவு பூஜை நடத்துவதற்கு யாரோ அழைத்ததன் பேரில் அங்குச் சென்றுள்ளார். அப்போது, பின்புறமாக வந்த மர்ம நபர் தன்னை கத்தியால் குத்தி விட்டு தப்பியோடி விட்டதாகவும், அந்த நபர் குறித்து எந்த அடையாளமும் தெரியவில்லை என்றும் சாமியார் கூறியுள்ளார். 

 

மேலும் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் சாமியாருடன் அவரது நண்பரும் வந்துள்ளார். ஆனால் அவரைக் காணவில்லை. ஒரு வேலை அவர்தான் சாமியாரை குத்திவிட்டு தப்பிவிட்டாரா என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளது. அதேபோல், பல்வேறு கோணங்களிலும் போலீஸார் இது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.