Skip to main content

முதலமைச்சர் தனக்கு தானே வெற்றி விழா நடத்துவதால் காவிரி ஆணையத்தில் பின்னடைவு: பி.ஆர்.பாண்டியன் 

Published on 18/06/2018 | Edited on 18/06/2018
pr pandiyan


தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
 

அப்போது அவர் கூறியதாவது, 
 

இந்தியா முழுவதும் ஓடக்கூடிய ஜீவநதிகள் தேசியமயமாக்கி நதிகள் இணைப்பு திட்டத்தை மேற்கொள்ள வலியுறுத்தி வரும் நிலையில் அதனை ஏற்க மறுத்து மவுனம் காத்து வரும் மத்திய அரசு அனைகள் பாதுகாப்பு சட்டம் கொண்டு வர முயற்ச்சிப்பது ஏன்? காவிரி வழக்கில் நீதிமன்றம் அனைகள் மாநில கட்டுப்பாட்டில் இருக்கவும், ஆறுகளும், தண்ணீரும் மாநிலங்களுக்கு சொந்தமில்லை என தெளிவுபடுத்திய பிறகும் இச்சட்டம் தேவையற்றது.

 இது முற்றிலும் மாநிலங்களின் சட்டபூர்வ உரிமைகளை பறிக்கும் உள்நோக்கம் கொண்டது மட்டுமல்ல, மாநில அரசுகளை அரசியல் ரீதியாக அடிமைப்படுத்தும் முயற்ச்சியாகும். எனவே அனைகள் பாதுகாப்புச் சட்டத்தை கைவிட்டு நதிகளை தேசியமாக்கிட மத்திய அரசு முன்வர வேண்டும்.

 

 

 

சேலம் 8 வழி சாலை தேவையில்லை...
 

சென்னையிலிருந்து சேலம் செல்வதற்கு இரண்டு நான்கு வழிச்சாலைகள் உள்ள நிலையில் மேலும் புதிய வழியில் 8 வழி சாலை அமைப்பது தேவையற்றது. ஒரு சில பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் சுங்க வரி மூலம் அதிக வருவாய் ஈட்டும் தொழிலாக சாலை அமைக்கும் பணிகளை மேற்க்கொள்கிறது. எனவே அவர்களுக்கு சாதகமாக மத்திய, மாநில அரசுகள் துணை போவது கண்டிக்கது.

 நிலம் கையகப்படுத்த மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தின் வழி முறைகளை பின்பற்ற மறுத்து காவல்துறையைக் கொண்டு விவசாயிகள் மீது அடக்குறையை கையால்வது கண்டனத்திற்குரியது. மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் தங்களது உரிமைகள் குறித்து எடுத்துரைக்ககூட அனுமதி மறுப்பதும், விவசாயிகளை அழைத்து பேசி அவர்களின் ஒப்புதலை பெற உரிய முறையில் முயற்ச்சிக்காமல் பொய் வழக்குப் போட்டு சிறையிலடைக்க முயற்ச்சிப்பது ஜனநாயக விரோதமானது. விளை நிலங்களையும்,வீடுகளை இழக்கப் போகிறோம் என்று கதறும் மக்களின் கண்ணீரை துடைக்க மறுப்பதும், மக்களாட்சி நடைபெறும் தமிழகத்தில் பெரும்பான்மை விவசாயிகளின் கருத்து சுதந்திரம் பறிபோவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
 

காவிரி ஆணையம்

 

கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி இன்று டெல்லியில் பத்திரிக்கையாளர்களிடம் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கும் உத்திரவில் மாற்றங்கள் செய்யாவிட்டால் செயல்படுத்த இயலாது என்று கூறுவது நீதிமன்ற அவமதிப்பாகும். இது குறித்து மத்திய அரசும், நீர்வளத் துறை ஆணையமும் தனது நிலையை தெளிவுப்படுத்த வேண்டும். 

கர்நாடக அனைகள் அனைத்தும் நிரம்பிய நிலையில் அம்மாநில அரசு உபரி நீரை மட்டும் தமிழகத்திற்கு திறந்து விடுவதும், உபரி நீர் குறைந்தால் உடன் அடைத்து விடுவதையும் மத்திய அரசு வேடிக்கை பார்ப்பது கண்டனத்திற்குறியது. 

ஆணையம் அமைப்பதை கர்நாடகம் ஏற்க மறுத்து வரும் நிலையில் அனைகளின் தண்ணீர் விநியோகிக்கும் அதிகாரத்தை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மத்திய நீர்வளத்துறை ஆணையம் ஏற்க மறுப்பது, தனது பொருப்பை தட்டிக் கழிக்கும் செயலாகும். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

 

 

 

காவிரி வெற்றி விழா பின்னடைவு...
 

இந்நிலையில் தமிழக அரசு முழு அதிகாரம் கொண்ட ஆணையம் அமைத்து உரிய தண்ணீரை பெற்று வழங்குவதற்க்கான நடவடிக்கையை மேற்கொள்ளாமல், முதலமைச்சர் தனக்கு தானே அவசரப்பட்டு வெற்றி விழா நடத்திக் கொள்வது காவிரி ஆணையம் அமைக்கும் நடவடிக்கையில் தமிழகத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'காவிரி நீர் எங்கே...? மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கமிட்ட பி.ஆர்.பாண்டியன் குண்டுக்கட்டாக கைது

Published on 25/09/2023 | Edited on 25/09/2023

 

'Where is Cauvery water...? BR Pandian who shouted slogans condemning the central and state government was arrested

 

காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து, அதற்கான வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் காவிரி நீர் ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தீர்ப்பு நிறைவேற்றப்படாததைத் தொடர்ந்து கர்நாடக அரசு தமிழகத்திற்கு நீர் திறக்க வேண்டும் என தஞ்சாவூரில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

இந்நிலையில் சென்னை மெரினா சாலையில் விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் தேசியக் கொடியை கையில் ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டார். 'கர்நாடக அரசிடம் இருந்து நீரை பெற்றுத்தராத மத்திய அரசையும், வேடிக்கை பார்க்கும் மாநில அரசையும் கண்டிக்கிறேன்' என கோஷமிட்டார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அங்கிருந்து செல்ல மறுத்ததால் போலீசாருக்கும் பி.ஆர்.பாண்டியனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பி.ஆர்.பாண்டியனும், அவருடன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்க நிர்வாகியும் தொடர்ந்து குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர்.

 

 

 

Next Story

முல்லைப் பெரியாறு அணை கட்டுமானத்தில் ஈடுபட்ட மறைந்த டி.ஐ.ஜி.யின் குடும்பம் - பி.ஆர்.பாண்டியன்

Published on 07/07/2023 | Edited on 07/07/2023

 

B.R. Pandian condoles the demise of DIG Vijayakumar

 

“தனது மூதாதையர் முல்லைப் பெரியாறு அணை கட்டுவதில் ஈடுபட்டதை டிஐஜி விஜயகுமார் அவ்வப்போது என்னிடத்தில் நினைவு கூறுவார்” என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

 

கோவை டிஐஜி விஜயகுமார் இறப்பு குறித்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு காவல்துறையில் கோவை சரக டிஐஜியாக மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்த விஜயகுமார் ஐபிஎஸ் அவர்கள் தற்கொலை செய்து கொண்டு இறந்தார் என்கிற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. மிகச் சிறப்பாகவும் நேர்மையாகவும் பாரபட்சமற்ற முறையிலும் துணிவோடும் செயல்படும் பண்புமிக்கவர். விளம்பரம் இல்லாமல் தன்னடக்கத்துடன் அனைவரிடத்திலும் சிரித்த முகத்துடன் பணிவுடன் பழகும் உயர்ந்த மனம் கொண்டவர்.

 

தேனி மாவட்டத்தில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த அவர் முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். தனது மூதாதையர் முல்லைப் பெரியாறு அணை கட்டுவதில் ஈடுபட்டதை அவ்வப்போது என்னிடத்தில் நினைவு கூறுவார். தேனி மாவட்ட விவசாயிகள் பிரச்சினைகளுக்காக நான் தேனி பகுதி சென்று திரும்பும்போதெல்லாம் பிரச்சனைகள் குறித்து என்னோடு தொலைபேசியில் விவாதிப்பார். தான் பிறந்த மண்ணின் மீதும் முல்லைப் பெரியாறு அணை மீதும் அளவற்ற மோகம் கொண்டவர். 

 

இரண்டு முறை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக செயல்பட்டு மிகச்சிறந்த காவல்துறை அதிகாரி என்கிற புகழை அனைவரிடத்திலும் பெற்றவர். இவரது மறைவு காவல் துறையில்  பேரிழப்பாகும். அதுமட்டுமின்றி காவல்துறையில் காவலர்களுக்கு ஏற்படும் மன அழுத்தங்கள் அடிமட்ட காவலர்கள் துவங்கி உயர்மட்ட அதிகாரிகள் வரையிலும் தொடர்வதை தடுத்து நிறுத்த தமிழக அரசுக்கு இவரது மரணம் வழிகாட்டுதலாக அமையும் என நான் எதிர்பார்க்கிறேன். அவரை இழந்து வாடுகிற குடும்பத்தாருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.