Skip to main content

பழுதான மின் பகிர்மான பெட்டியைச் சரிசெய்யக் கோரி விவசாயிகள் போராட்டம்! 

Published on 03/08/2020 | Edited on 03/08/2020

 

Farmers struggle

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள கவனை கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கிராமத்தைச் சுற்றி சுமார் பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். 

 

இந்நிலையில் அக்கிராமத்திலுள்ள மின்பகிர்மான பெட்டி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பழுதாகியது. மின்பகிர்மான பெட்டி பழுது ஆகியதால், விவசாய நிலங்களுக்குத் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் அவதி அடைந்த விவசாயிகள், தங்களது சொந்த செலவில் அப்பெட்டியைப் பழுது நீக்கம் செய்தனர். 

 

இந்நிலையில் மீண்டும் பழுது ஆகியதால், அப்பெட்டியை மாற்றி புதிய மின் பகிர்மான பெட்டி அமைத்துத் தர வேண்டும் என விருத்தாசலம் மின்வாரிய அலுவலகத்தில் அப்பகுதி கிராம மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தனர். 

 

ஆனால், அதிகாரிகள் அலட்சியத்தால் கடந்த ஒரு மாத காலமாக அப்பகுதி மக்கள் மின்சாரம் இல்லாமல், விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வந்தனர். அதையடுத்து அதிகாரிகளின் அலட்சியத்தைக் கண்டித்தும், சம்பந்தப்பட்ட அதிகாரியை இடமாற்றம் செய்யக் கோரியும், விருத்தாசலம் மின்வாரிய அலுவலகத்தில் தரையில் அமர்ந்து விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகள் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

'தண்ணிக்காக நாங்க எங்கே போவோம்'-காலி குடத்துடன் மக்கள் போராட்டம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
'Where shall we go for water'-people protest with empty jugs

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராம மக்கள் இரண்டு வருடமாகவே தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 'கடந்த ஆறு மாதமாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் தான் கிடைக்கிறது. எங்கள் ஊரில் மின்சார வசதி இல்லை, ரோடு வசதி இல்லை இது தொடர்பாக பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. தண்ணிக்காக நாங்கள் எங்கே போவோம்' என காலி  குடங்களுடன் சாலையில் நின்றபடி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.