தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பொழிந்து வரும் நிலையில் சென்னையிலும் பரவலாக பல இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 775 கன அடியாக உயர்ந்திருந்த நிலையில், ஏரியிலிருந்து 250 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 23.60 அடியாகவும், நீர் இருப்பு 3540 மில்லியன் கன அடியாகவும் இருக்கிறது. இன்று காலை 9 மணிக்கு பிறகு செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு 250 லிருந்து 500 அடி ஆக அதிகரிக்க வாய்ப்பு இருக்கலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.