கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.அதேபோல் தமிழகத்தின் தலைநகரான சென்னையிலும் பல பகுதிகளில் தொடர்ந்து விட்டுவிட்டு மழை பொழிந்தநிலையில், இன்று மாலை கொட்டி தீர்த்த கனமழையால் சென்னை பெசன்ட் நகர் சாலையில் மழைநீர் தேங்கியது. அதேபோல் சென்னை மெரினா கடற்கரையில் பெய்த மழையால் கடற்கரையில் தள்ளுவண்டி கடைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் மழைநீர் தேங்கியது.