Skip to main content

கொடுமணலை ஒத்த குறியீடுகளுடன் பானை ஓடுகள், குடுவைகள், முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு!!

Published on 09/06/2020 | Edited on 10/06/2020
Pottery tiles, flasks, old-fashioned locks with similar codes of cruelty !!



தமிழ்நாடு முழுவதும் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய மக்களின் வாழ்விடங்கள், முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டு வருவதுடன் எழுத்து காலத்திற்கு முந்தைய குறியீடுகளுடனான பானை ஓடுகளும் கண்டுபிடிக்கப்பட்டாலும் தொல்லியல் அகழாய்வு செய்யப்படாமல் தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம் மண்ணோடு மண்ணாகிக் கொண்டிருக்கிறது.


புதுக்கோட்டை - தஞ்சை மாவட்ட எல்லையில் வில்வன்னி ஆற்றுப்படுகையில் அம்பலத்திடல் என்னுமிடத்தில் தாழிகள், குடுவைகள், கின்னங்கள், சுடுமண் கட்டுமானங்கள், கற்கோடாரி, மற்றும் எழும்பு துணடுகள் கண்டெடுக்கப்பட்டு 15 ஆண்டுகள் கடந்தும்கூட அந்த இடத்தை அகழாய்வு செய்ய கிராம மக்களும், தொல்லியல் ஆய்வாளர்களும் பல முறை கோரிக்கை வைத்தும் இதுவரை மத்திய, மாநில தொல்லியல்துறை கண்டுகொள்ளவில்லை. அதனால் பாதுகாக்கப்படவேண்டிய அம்பலத்திடல் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகளால் சிதைக்கப்பட்டு வருகிறது.

STONES

இந்தநிலையில்தான் தஞ்சை மாவட்டம், பேராவூரணி வட்டத்தில் கட்டயன்காடு கிராமத்தில் அக்னி ஆற்றங்கரையில் அய்யனார் கோயில் குளம்குடிமராமத்துப் பணிகள் தொடங்கி நடக்கும் போது தரை மட்டத்தில் இருந்து சுமார் 6 அடி ஆழத்தில் ஆங்காங்கே பழங்கால முதுமக்கள் தாழிகள் காணப்பட்டது. இதனைப் பார்த்த கிராம மக்களும் ஏபிஜெ அப்துல்கலாம் கிராம வளர்ச்சிக்குழு இளைஞர்களும் குறிப்பிட்ட தாழிகள் புதையுண்டுள்ள இடத்தை பாதுகாப்பாக எல்லையிட்டு பாதுகாத்ததுடன் நெல்லை உதவி ஆட்சியர் சிவகுருபிரபாகரன் ஐ.ஏ.எஸ்.-க்கு ( சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் ஒட்டங்காடு) கிராம வளர்ச்சிக்குழு இளைஞர் வீரமணி மூலம் படங்களுடன் தகவல் கொடுத்துள்ளனர்.

 

 

Pottery tiles, flasks, old-fashioned locks with similar codes of cruelty !!


இதனை பார்த்த சிவகுருபிரபாகரன் ஐஏஎஸ், தமிழக தொல்லியல் ஆணையர் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்.-க்கு தகவல் அனுப்பியுள்ளார். இந்த தகவலின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்ய தஞ்சை தமிழ்பல்கலைக்கழக தொல்லியல் ஆய்வுத்துறை மூலம் முதல்கட்ட மேலாய்வுக்கு உத்தரவிட்டதையடுத்து பல்கலைக்கழக ஆய்வு மாணவர் கார்த்திகேயன் செய்வாய் கிழமை வந்து ஆய்வு மேற்கொண்டார். 


ஆய்வில் சுமார் 170 செ.மீ வட்டத்தில் சுமார் 20 முதுமக்கள் தாழிகள் வெளியே தெரிந்தது. மேலும் கருப்பு, சிவப்பு, பானை ஓடுகளும் கண்டுபிடிக்கப்பட்டது.  மேலும் ஆய்வு மாணவரின் மேலாய்வு தொடர்ந்து கொண்டிருந்தபோது அருகில் உள்ள தெற்கு ஒட்டங்காடு கிராமத்திலும் அய்யனார் கோயில் குளத்தில் ஏராளமான பானை ஓடுகள் விரவிக்கிடப்பதாகவும் ஆங்காங்கே தாழிகள் உடைந்து காணப்படுவதாகவும் இளைஞர்கள் தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்படி ஒட்டங்காட்டிலும் மேலாய்வு மேற்கொண்டார்.

 

 

Pottery tiles, flasks, old-fashioned locks with similar codes of cruelty !!


அப்போது சில வருடங்களுக்கு முன்பு குளம் மராமத்து செய்யும்போது எடுக்கப்பட்டு இளைஞர்களால் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த தாழிக்குள் இருந்து எடுக்கப்பட்ட சுடுமண் சிவப்பு குடுவையை கொண்டு வந்து கொடுத்தனர். ஒரு நாள் முழுவதும் நடந்த ஆய்வில் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு பானை ஓட்டில் குறியீடுகள் காணப்பட்டுள்ளது. அந்த குறியீடு எந்த காலத்தை சேர்ந்தது என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். மேலும் அகழாய்வு செய்தால் மேலும் பல சான்றுகள் கிடைக்கலாம் என்றவர் இன்றைய ஆய்வு குறித்து விரைவில் அறிக்கை கொடுத்த பிறகு அதிகாரிகள் ஆய்வு செய்ய வாய்ப்புகள் உள்ளதாக கூறினார்.

 

Pottery tiles, flasks, old-fashioned locks with similar codes of cruelty !!


இந்த தகவல் அறிந்து பட்டுக்கோட்டை கோட்டாட்சியர், பேராவூரணி வட்டாட்சியர், பேராவூரணி தொகுதி ச.ம.உ. கோவிந்தராசு உள்ளிட்டோர் முதுமக்கள் தாழிகளை பார்வையிட்டனர். இந்த நிலையில் ஒட்டங்காடு ஏபிஜெ அப்துல்கலாம் கிராம வளர்ச்சிக்குழுவினர் தொல்லியல் துறை மூலம் ஆய்வு செய்ய வேண்டும் என்று  முதலமைச்சர் மற்றும் தொல்லியல் துறைக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.  விரைவில் தஞ்சை தமிழ்பல்கலைக்கழகத்தின் தொல்லியல் ஆய்வுத்துறை ஆய்வுகள் மேற்கொள்ளப்படலாம் என்று கூறப்படுகிறது.

தெற்கு ஒட்டங்காட்டில் கிடைத்த குறியீடு கொடுமணலில் கண்டெடுக்கப்பட்ட குறியீடுகளை ஒத்துள்ளதாக காண முடிகிறது. அதாவது சுமார் 2600 ஆண்டுகள் பழமையானதாக இந்த குறியீட்டு காலத்தை கணிக்க முடிகிறது. அதாவது கொடுமணல் குறித்த ஆய்வு நூலில் இதே போன்ற குறியீடு கே. டி. எல் 368, கே.டி,எல்,ஜி 380 என்றும் பதிவிடப்பட்டுள்ளது. இந்த ஒப்புமையை காணும்போது ஒட்டங்காடு குறியீடும் சுமார் 2600 ஆண்டுகள் பழமையானதாக கருதலாம்.

 

Pottery tiles, flasks, old-fashioned locks with similar codes of cruelty !!


எல்லாவற்றுக்கும் விடை காண முழுமையான அகழாய்வே தீர்வு. உயச்சந்திரன் ஐஏஎஸ் நிச்சயம் அகழாய்வுக்கு உத்தரவிடுவார் என்ற நம்பிக்கை கிராம மக்கள் மற்றும் இளைஞர்களிடம் உள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

1000 ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிற்பம் கண்டுபிடிப்பு

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
1000 year old Mahavira sculpture discovered

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மணவராயனேந்தலில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான கி.பி.11ம் நூற்றாண்டு மகாவீரர் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருச்சுழி பகுதியில் கள ஆய்வின் போது, மணவராயனேந்தலில் இளையராஜா என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் 24 ஆம் தீர்த்தங்கரர் மகாவீரர் சிற்பம் இருப்பதை அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் சு. ராஜபாண்டி, தொல்லியல் துறை பயிற்சி மாணவர் மீ. சரத் ராம் ஆகியோர் கண்டுபிடித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே. ராஜகுரு, ஆய்வாளர் நூர்சாகிபுரம் சிவகுமார் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

இதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே. ராஜகுரு கூறியதாவது, ‘விருதுநகர் மாவட்டத்தில் கோவிலாங்குளம், தொப்பலாக்கரை, குறண்டி, இருஞ்சிறை, புல்லூர், பாலவநத்தம், பந்தல்குடி, பாறைக்குளம், திருச்சுழி, புலியூரான், ஆவியூர், இருப்பைக்குடி, குலசேகரநல்லூர், சேத்தூர், சென்னிலைக்குடி, கீழ் இடையன்குளம், கிள்ளுக்குடி உள்ளிட்ட இடங்களில் சமண சமயம் பரவி இருந்ததற்கான தடயங்கள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மணவராயனேந்தலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மகாவீரர் சிற்பம் பாதி மண்ணில் புதைந்த நிலையில் உள்ளது. கருங்கல்லால் ஆன இச்சிற்பத்தில் மகரத் தண்டுகளுடன் கூடிய சிம்மாசனத்தில் மகாவீரர் அமர்ந்துள்ளார். அவருக்குப் பின்புறம் பிரபாவளி எனும் ஒளிவட்டம் உள்ளது. அதன் மேற்பகுதியில் சந்திராதித்தம், நித்திய விநோதம், சகல பாசனம் ஆகியவற்றைக் குறிக்கும் முக்குடை அமைப்பு உள்ளது. முக்குடை அழகிய கொடிகளுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மகாவீரரின் இருபுறமும் இரு இயக்கர்கள் உள்ளனர். இதன் காலம் கி.பி.11-ம் நூற்றாண்டாகக் கருதலாம். திருப்புல்லாணியிலிருந்து கமுதி, திருச்சுழி வழியாக மதுரை செல்லும் பெருவழிப் பாதையில் அநேக இடங்களில் தீர்த்தங்கரர் சிற்பங்கள் கிடைத்திருக்கின்றன.

சிற்பம் உள்ள இடத்தைச் சுற்றிலும் இரும்புக் காலத்தைச் சேர்ந்த வழுவழுப்பான கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள் சிதறிக் கிடக்கின்றன. இவ்வூர் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான இரும்புக் காலம் முதல் மக்கள் குடியிருப்பாக இருந்துள்ளதற்கு இவை ஆதாரமாக உள்ளன. பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் இச்சிற்பத்தை அரசு அருங்காட்சியகத்தில் வைத்துப் பாதுகாக்க வேண்டும் என அரசைக் கேட்டுக் கொள்வதாக’ அவர் தெரிவித்தார்.

Next Story

தஞ்சை ஆணவக்கொலை; மேலும் மூன்று பேர் கைது

Published on 12/01/2024 | Edited on 12/01/2024
Tanjore Massacre; Three more people were arrested

தஞ்சையில் நடந்த ஆணவக்கொலை சம்பவத்தில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள நெய்வவிடுதி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் ஐஸ்வர்யா (19). இவரும், பூவாளூர் பகுதியைச் சேர்ந்த நவீன் (19) என்பவரும் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போதே காதலித்து வந்துள்ளனர். இருவரும் திருப்பூர் மாவட்டம் அரவப்பாளையத்தில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது காதலுக்கு ஐஸ்வர்யாவின் குடும்பத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால், இருவரும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். மேலும், இவர்கள் இருவரும் திருப்பூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கி வந்துள்ளனர்.

இதையடுத்து, இவர்கள் திருமணம் செய்தது ஐஸ்வர்யாவின் பெற்றோருக்குத் தெரியவந்தது. இது தொடர்பாக, ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து, கடந்த 2 ஆம் தேதி பல்லடம் காவல்துறையினர், ஐஸ்வர்யாவை சமாதானப்படுத்தி அவரது தந்தை மற்றும் உறவினர்களுடன் அனுப்பி வைத்தனர். அதன் பின்னர், கடந்த 3 ஆம் தேதி நவீனை தொடர்பு கொண்ட அவரது நண்பர்கள், ‘ஐஸ்வர்யாவை அவரது தந்தை மற்றும் உறவினர்கள் அடித்து துன்புறுத்தி கொலை செய்து எரித்துவிட்டனர்’ என்று கூறியுள்ளனர்.

இதில் அதிர்ச்சியடைந்த நவீன், ஒரத்தநாடு பகுதிக்குச் சென்றுள்ளார். மேலும், அவர் இந்த சம்பவம் குறித்து வாட்டாத்திக்கோட்டை காவல் நிலையத்தில் ஐஸ்வர்யா ஆணவக் கொலை செய்யப்பட்டதாக புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரின் அடிப்படையில், நெய்வவிடுதி மற்றும் பூவாளூர் பகுதிகளுக்குச் சென்று காவல்துறையினர் கடந்த 8ம் தேதி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், ஐஸ்வர்யா மர்மமான முறையில் இறந்துள்ளதாகத் தெரியவந்தது.

இதையடுத்து, ஐஸ்வர்யா உடல் எரிக்கப்பட்ட சுடுகாட்டிற்கு காவல்துறையினர் சென்று பார்த்தபோது, அங்கு உடல் எரிக்கப்பட்ட பின் சாம்பல் கூட இல்லாததை கண்ட அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள், அவரது மனைவி ரோஜா, ஐஸ்வர்யாவின் பெரியம்மா பாசமலர், அவரது சகோதரி விளம்பரசி, மற்றொரு சகோதரி இந்து ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில், ஐஸ்வர்யா கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள் அவரது மனைவி ரோஜா இருவரையும் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த மற்றவர்களையும் அடையாளம் கண்ட போலீசார் விசாரணை செய்து திருச்செல்வம், சின்ராஜ், முருகேசன் ஆகிய 3 பேரை இன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பியுள்ளனர். இதே சம்பவத்தில் மேலும் சிலரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் மேலும் 3 பேர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

பல்லடம் போலீசார் திருமணம் செய்துள்ள ஒரு தம்பதியை வழக்குப்பதிவு செய்யாமல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் புகார் கொடுத்தவர்களுடன் அனுப்பிவைத்ததால் தான், இப்படி ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்பும் நிலையில், பல்லடம் காவல் நிலைய ஆய்வாளர் முருகையன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.