Skip to main content

உயிரை வாங்கிய சாலைப்பள்ளம்; ஒரு மணி நேரமாக சாலையில் கிடக்கும் சொமேட்டோ ஊழியரின் உடல் 

Published on 12/11/2022 | Edited on 12/11/2022

 

A pothole that claimed life; Body of Somato employee found on road

 

சென்னையில் சொமேட்டோ ஊழியர் விரைவு சாலையில் மழையால் ஏற்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்த நிலையில் லாரி மோதி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் சென்னையிலும் பல பகுதிகளில் விட்டுவிட்டு மழையானது பொழிந்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் நீர் தேங்கும்  சூழல் ஏற்பட்டுள்ளது. அண்மையில் தனியார் செய்தி தொலைக்காட்சி ஊழியர் ஒருவர் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையை அடுத்த மாங்காடு பகுதியைச் சேர்ந்த தனியாக நிறுவன ஊழியர் ஒருவர் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்திருந்தார்.

 

இந்நிலையில், சென்னை மணலி கெனால் ரோடு சந்திப்பு பகுதியில் சாலையில் உணவு டெலிவெரிக்காக சென்ற சொமேட்டோ ஊழியர் ஒருவர் அந்த பகுதியில் மழைநீர் அரிப்பால் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் தடுமாறி விழுந்தார். அப்பொழுது பின்புறம் வந்த லாரி அவர் மீது ஏறி சென்றது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்த விபத்து நிகழ்ந்து சுமார் ஒரு மணி நேரமாக அந்த ஊழியரின் சடலம் சாலையிலேயே கிடக்கிறது. உயிரிழந்து கிடைக்கும் சொமேட்டோ ஊழியர் யார் என்பது தொடர்பான எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.விபத்தில் ஊழியரின் செல்போன் உள்ளிட்டவை முழுமையாக சேதமடைந்ததால் எந்த தகவலும் கிடைக்கவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.