தமிழகத்தில் 7 மாதத்திற்கு முன்பேதேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அனைத்துக் கட்சிக்குள்ளும் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில், ஒவ்வொரு நாளும் தேர்தல் களத்தை நோக்கி தமிழகம் பயணித்து வருகிறது.
இந்நிலையில் அ.தி.மு.க அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களைச் சந்திக்கையில், தமிழகத்தில் தேர்தல் தள்ளிவைப்பதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை. அடுத்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடக்கும். அ.தி.மு.க ஆட்சி மலர்ந்தது என்ற செய்தி வரும் எனத் தெரிவித்துள்ளார்.