Poster for Sasikala with ID card ... Virudhunagar sensation!

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவின் 4 ஆண்டுகள் சிறை தண்டனைநிறைவடைந்ததை அடுத்து விடுவிக்கப்பட்ட சசிகலா,பெங்களூருபுறநகர் பகுதியான தேவனஹல்லி அருகே உள்ள பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். வரும்பிப். 8 ஆம் தேதி காலை9 மணிக்கு சசிகலாதமிழகம் வருவார் என டி.டி.வி.தினகரன்சார்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் சசிகலாவை வரவேற்று அதிமுக நிர்வாகிகள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட, போஸ்டர், பேனர் வைத்த அதிமுகவினர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.

Advertisment

இந்நிலையில்விருதுநகரில் சசிகலாவை வரவேற்று அதிமுக தொண்டர்கள் அடையாள அட்டையுடன் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. “தொண்டர்களைக் காக்க வருகைதரும் தியாகத் தலைவியே”,“அதிமுகபொதுச்செயலாளரே”எனஅந்த போஸ்டரில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

சசிகலா வரும் 8-ஆம் தேதி தமிழகம் வரவுள்ளநிலையில்இன்று (06.02.2021) மாலை அதிமுகதலைமை அலுவலகத்தில் இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்தலைமையில் ஆலோசனைக் கூட்டம்நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment