A poster condemning K.S.Azhagiri caused a sensation

Advertisment

சிதம்பரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் 'தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்ட கமிட்டி என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியின் நற்பெயரை கெடுத்து வரும் ஊழல்வாதியே ராஜினாமா செய்' என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத்தலைவர் கே.எஸ்.அழகிரியைக் கண்டித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இந்தப் போஸ்டரால் காங்கிரஸ் கட்சியினரிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த காங்கிரஸ் கட்சியின் மாநிலத்தலைவர் கே.எஸ்.அழகிரியின் ஆதரவாளர்கள் அழகிரியைக் கண்டித்து ஒட்டிய போஸ்டரை கிழித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.

காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் தீவிரமாக நடைபெற்று அடிதடி வரை சென்றுள்ள நிலையில் தற்போது கட்சியின் மாநில தலைவரின் சொந்த ஊரான சிதம்பரம் பகுதியில் அவரைக் கண்டித்து போஸ்டர் ஒட்டிய சம்பவம் இந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.