Skip to main content

தபால் வாக்கு முறைகேடு! - அமமுக நிர்வாகி உட்பட மூவர் கைது!

Published on 31/03/2021 | Edited on 31/03/2021

 

postal vote issue in sankarankovil
                                                                  மாவட்டக் கலெக்டர்

 

70 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்குப் பதிவிற்காக வாக்குச் சாவடிக்கு வரத்தேவை இல்லை. அவர்கள் தபால்மூலம் தங்களின் வாக்குகளைப் பதிவு செய்து கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டது.

 

தபால் வாக்குகளில் முறைகேடுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அவர்கள் மிரட்டப்படலாம். அவர்களின் வாக்குச் சீட்டுகளைப் பெற்று தங்களுக்கு வேண்டியவர்களின் சின்னத்தில் பதிவு செய்யும் சம்பவங்கள் நடப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. எனவே, இதுபோன்ற புதிய நடைமுறையை ரத்து செய்து, வழக்கம் போல் வாக்குச் சாவடி வாக்குப்பதிவு முறையைக் கொண்டு வரவேண்டும் என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆணையத்திற்குத் தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்தன. அந்த சிஸ்டத்தைக் கடுமையாக எதிர்த்தனர்.

 

இது இப்படியிருக்க, தென்காசி மாவட்டத்தில் தபால் வாக்குகளில் நடந்த முறைகேடுகளும், மாயாஜால வித்தைகளும் வீதிக்கு வந்துவிட்டன. அதுவும் தேர்தல் பணிக்காகச் செல்கிற ஆசிரியர்களின் தபால் வாக்குகளில் முறைகேடு நடந்ததுதான் விழிகளை விரிய வைக்கிற விஷயம்.

 

தென்காசி மாவட்டத்தின் தென்காசி சட்டமன்றத்திற்குட்பட்ட தென்காசி கல்வி மாவட்டத்தின் கீழப்பாவூர் சரகத்தின் சுரண்டை ஆர்.சி. நடுநிலைப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியைப் பணியிலிருப்பவர் சகாய ஆரோக்ய அனுஷ்டாள். இவர் தனது தபால் வாக்கை ஒரு சின்னத்திற்குப் பதிவு செய்து, அந்த வாக்குச் சீட்டினை தனது ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்ஆப்களில் பரப்பியதால் மாவட்டமே அதிர்ந்தது. இதையடுத்து மாவட்டக் கலெக்டரான சமீரன், புகாருக்கு ஆளான ஆசிரியையை தற்காலிகப் பணி நீக்கம் செய்யுமாறு உத்தரவிட, தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் ஆசிரியை சகாய ஆரோக்ய அனுஷ்டாளை தற்காலிகப் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறார்.

 

இதற்கிடையே சம்பந்தப்பட்ட ஆசிரியை சகாய ஆரோக்ய அனுஷ்டாள் தபால் வாக்குச்சீட்டை நான் பெறவில்லை. எனக்கு யாரும் தரவில்லை. எனக்கு ஃபேஸ்புக் கணக்குகள் கிடையாது. யாரோ மர்ம நபர்கள் எனது தபால் ஓட்டைப் பெற்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளதாக சுரண்டை வருவாய் ஆய்வாளர் மாரியப்பன் மூலம் தெரிந்து கொண்டேன் என்று மாவட்டக் கலெக்டரிடம் விரிவான புகார் மனுவைக் கொடுத்தவர் தான் நிரபராதி என்றிருக்கிறார்.

 

ஆசிரியை சகாய ஆரோக்ய அனுஷ்டாள், மாவட்டத்திற்குட்பட்ட சங்கரன்கோவில் மெட்ரிக் பள்ளி ஒன்றில் கடந்த 26ம் தேதியன்று நடந்த இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டிருக்கிறார். அது சமயம் அவர் தனக்கான தபால் ஓட்டுக் கேட்டு முறையாகப் பயிற்சி வகுப்பின் அதிகாரியிடம் விண்ணப்பித்திருக்கிறார். ஆனால் அவருக்கு தபால் வாக்குச்சீட்டுத் தரவில்லை. மாறாகப் பயிற்சி வகுப்பின் தேர்தல் அதிகாரியிடமிருந்து வேறு யாரோ உரிய கையொப்பமில்லாமல் ஆசிரியைக்கான தபால் வாக்குச் சீட்டைப் பெற்று பதிவுசெய்து ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளனர் என்கிற விபரம் பிறகே தெரியவந்திருக்கிறது. இதுகுறித்து தென்காசி தொகுதியின் உதவி தேர்தல் நடத்தும் தாசில்தார் வெங்கடேஷைச் சந்தித்து ஆசிரியை சகாய ஆரோக்ய அனுஷ்டாள் நடந்தவைகளைத் தெரியப்படுத்தியிருக்கிறார்.

 

அதற்கு அவரோ, சங்கரன்கோவிலில் தபால் வாக்குகள் வழங்கும் போது சிலர் கையெழுத்திடாமலேயே தபால் வாக்குகளைப் பெற்றுச் சென்றுள்ளனர். அதனால் நீங்களும் தபால் வாக்குப் பெற்றதாகப் பதிவேட்டில் கையெழுத்திடுங்கள் என்று சொல்ல, அவரிடம், நான், தபால் வாக்குச்சீட்டு வாங்கவே இல்லை. எனவே கையெழுத்திட முடியாது என மறுத்திருக்கிறார் ஆசிரியை.

 

ஆசிரியை விவகாரத்தைக் கிளப்பிய போதுதான் சங்கரன்கோவில் தேர்தல் பயிற்சி முகாமில் தேர்தல் அதிகாரி முன்னிலையில் நடந்த, கையெழுத்தைப் பெறாமலேயே தபால் வாக்குச் சீட்டுகள் சப்ளை செய்தது, பூதமாக வெளியேறி, பணியாளர்களையும் தொகுதி வேட்பாளரையும் அதிர வைத்திருக்கிறது.

 

இதனையடுத்தே நடந்தவைகளை விரிவாக மாவட்டக் கலெக்டரான சமீரனிடம் புகார் கொடுத்த ஆசிரியை, சகாய ஆரோக்ய அனுஷ்டாள், நான் நிரபராதி. என்மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றிருக்கிறார். இவருக்கு ஆதரவாகத் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் திரண்டுள்ளனர்.

 

இதன்பின் ஆசிரியையின் விவகாரம் போலீசில் புகார் செய்யப்பட அவர்களின் விசாரணையில், 505 என்ற எண் கொண்ட அந்த ஆசிரியையின் தபால்வாக்குச் சீட்டை தென்காசி மாவட்டத்தின் சுரண்டைப் பக்கம் உள்ள வெள்ளக்கால் ஊராட்சி ஒன்றியப் பள்ளியின் ஆசிரியையான கிருஷ்ணவேனி பெற்றது தெரியவந்திருக்கிறது.

 

போலீசாரின் விசாரணையில், வாக்குமூலம் கொடுத்த ஆசிரியை கிருஷ்ணவேணி, தனது மகனிடம் வாக்குச்சீட்டு எப்படி இருக்கும் என்பதைக் காண்பிக்க அதனைப் படமெடுத்து தன் மகனுக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்பியதாகவும், மகன் அதை தன் தந்தையும் அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகியான கணேச பாண்டியனுக்கு அனுப்ப, பின்னர் கணேசபாண்டியன் தனது கட்சியினரின் வாட்ஸ் ஆப்பில் பதிவிட்டிருக்கிறார். அக்கட்சியின் நிர்வாகி செந்தில் குமார் அதனைத் தனது ஃபேஸ்புக்கில் வெளியிட்டது வைரலானது என்று தெரிவித்திருக்கிறார். அதன் பிறகே ஆசிரியை கிருஷ்ணவேணி அவரது கணவர் கணேச பாண்டியன், அ.ம.மு.க. நிர்வாகி செந்தில்குமார் மூவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

 

ஆசிரியை சகாய ஆரோக்ய அனுஷ்டாள் மீது தவறில்லை. அவர் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்படும். அவரது வாக்குச் சீட்டு எண்ணுக்குப் பதிலாக வரிசை எண் 505 என்று கொடுத்துவிட்டார்கள் அதுதான் தவறு என்கிறார் தென்காசி தேர்தல் அலுவலரான ராமச்சந்திரன்.

 

postal vote issue in sankarankovil
                                                                                திமுக மா.செ.

 

ஆசிரியர்களின் கையொப்பம் வாங்காமலே அவர்களுக்கு தபால்வாக்குச் சீட்டுக்கள் கொடுத்த மிகப்பெரிய முறைகேடு சங்கரன்கோவிலின் தேர்தல் அதிகாரியான கோட்டாட்சியர் முருகசெல்வியின் பொறுப்பில் வருகிற பயிற்சித் துறையில் நடந்திருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு கோட்டாட்சியர் முருகசெல்வி, தேர்தல் வெற்றி எதிரணிப்பக்கம் வந்தாலும், நான், தேர்தலில் வெற்றி பெற்றது அ.தி.மு.க.வின் ராஜலெட்சுமி தான், என்று சான்றிதழ் கொடுப்பேன். எனக்கு மேலிடத்தில் ஆதரவு உள்ளது என்று அவர் பேசியது வெளியே கசிய, தி.மு.க.வின் தெ.மா.செ.வான சிவபத்மநாபன் கோட்டாட்சியர் முருகசெல்வியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் பொறுப்பில் அவர் நீடிக்கக் கூடாது என்று மாவட்டக் கலெக்டரிடம் புகார் செய்திருக்கிறார்.

 

நாம் இதுகுறித்தும், அதிகாரியே கையெழுத்துப்பெறாமல் தபால் வாக்குச்சீட்டுகள் கொடுத்தது பற்றியும் மாவட்டக் கலெக்டர் சமீரனிடம் கேட்டதில், “நீங்கள் குறிப்பிட்டது நல்ல பாய்ண்ட். நிச்சயம் அவர்கள் மீது நடவடிக்கை உண்டு” என்றார். தபால் வாக்குகளில் முறைகேடு. கையெழுத்துப் பெறாமலேயே தபால் வாக்குச்சீட்டுகள் கொடுத்தது போன்றவைகள் தென்காசி மாவட்டத்தில் நடந்தது பதமே. இதைப் போன்ற முறைகேடுகள் வேறு எங்கெல்லாம் நடந்திருக்கிறதோ என்கிறார்கள் தபால் வாக்குச் சீட்டு வேண்டாம் என்று தெரிவித்துவருபவர்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக பெண் பஞ்சாயத்து தலைவருக்கு கொலை மிரட்டல்!

Published on 01/04/2023 | Edited on 01/04/2023

 

DMK women panchayat leader threatened

 

முன்னாள் காவல்துறை அதிகாரியும் அவரது மனைவியும் சேர்ந்துகொண்டு திமுக பெண் பஞ்சாயத்து தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள களப்பாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சிவசங்கரி. இவர் களப்பாகுளம் பஞ்சாயத்து தலைவராகவும், திமுகவில் மாவட்ட மகளிரணி அமைப்பாளராகவும் இருந்து வருகிறார். சிவசங்கரி தன் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்யக்கூடியவர் என்றும், எப்போதும் பொதுமக்களை அணுகி தங்களுடைய குறைகளை கேட்டறிந்து சரி செய்யக்கூடியவர் என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

 

இந்நிலையில், பஞ்சாயத்து துணைத்தலைவராக இருப்பவர் மரகதம். அவரது கணவரான முருகன் என்பவர் முன்னாள் காவல் உதவி ஆய்வாளர். இவர்கள் இருவரும் சேர்ந்துகொண்டு பஞ்சாயத்து அலுவலகத்தில் சில அத்துமீறிய செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். தன் கணவர் முன்னாள் காவல்துறை அதிகாரி என்பதால் அவரோடு சேர்ந்து அதிகாரிகளை மிரட்டி வரும் மரகதம் பஞ்சாயத்து அலுவலகத்தில் உள்ள கோப்புகளை சரிபார்த்து வந்துள்ளனர்.

 

அதுமட்டுமின்றி, அங்குள்ள சில முக்கியமான கோப்புகளையும் எடுத்துச் செல்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கிடையில், பஞ்சாயத்து தலைவரான சிவசங்கரி துணைத்தலைவர் மரகதம் மற்றும் அவரது கணவரையும் பலமுறை கண்டித்துள்ளார். ஆனால், அதற்கெல்லாம் மசியாத இவர்கள், சிவசங்கரியை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். ஒருகட்டத்தில் விரக்தியடைந்த பஞ்சாயத்து தலைவர் சிவசங்கரி மரகதம் - முருகன் தம்பதி மீது சங்கரன்கோவில் தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், விசாரணை மேற்கொண்ட போலீசார் பஞ்சாயத்து அலுவலகத்தில் உள்ள சிசிவிடி காட்சிகளை ஆய்வு செய்ததில் மரகதமும் முருகனும் அத்துமீறிய செயல்களில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையறிந்த முருகனும் தலைமறைவாகியுள்ளார்.

 

இதையடுத்து, முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் முருகன் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை வலைவீசி தேடி வருகின்றனர். அதே சமயம், திமுக பெண் பஞ்சாயத்து தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Next Story

மூச்சு முட்டி நின்ற திமுக கவுன்சிலர்களின் திக் திக் நிமிடங்கள்! 

Published on 05/03/2022 | Edited on 05/03/2022

 

DMK councilors who were out of breath!

 

தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் நகராட்சியின் 30 வார்டுகளில் தி.மு.க. மற்றும் கூட்டணி 12, அ.தி.மு.க. 12 என சமபலத்திருந்தாலும், மன்றத் தலைவர் பதவியைக்குறிவைத்து தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் போட்டியிட பரபரப்பான நகராட்சி. கழகங்களுக்கு 4 கவுன்சிலர்கள் தேவைப்பட்டாலும் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் மீதமுள்ள வார்டுகளைக் கைப்பற்றிய சுயேட்சைகள் 5, எஸ்.டி.பி.ஐ. 1 என 6 பேர்களில் நான்கு உறுப்பினர்களை வளைத்துக் கொண்டு போவதில் தீவிரமாயினர்.

 

எதிரி நான்கு உறுப்பினர்களை வளைப்பதற்குள், முந்திக் கொண்ட தி.மு.க., சுயேட்சைகள், எஸ்.டி.பி.ஐ. என ஒட்டு மொத்த ஆறு பேர்களையும் தேவையான, திருப்தியான டீலிங்க்குகளுடன் தன் வசமாக்கிப் பொத்தி பாதுகாத்துக் கொண்டது. இந்த ஆறு பேர்களுக்கான மொத்த கிப்ட்களின் தொகை ஒரு “சி“யையும் தாண்டிவிடும் ஒரு வழியாக டேர்ம்ஸ் மூலம் அது சரிக்கட்டப்பட்டு, பெறப்பட்ட தொகையினை பிற்பாடு வருகிற நகரின் காண்ட்ராக்ட் வேலைகளின் டீலிங்க்கின் மூலம் அட்ஜஸ்ட் செய்து திரும்ப அடைத்துவிட வேண்டும் என்பதே திட்டமாம்.

 

இந்த வழிகளில்தான் தி.மு.க.விற்கான பலம் 18 என்றானது. அதே சமயம் தி.மு.க. உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்த உடனேயே 12 கவுன்சிலர்களும் குற்றாலம் கொண்டு செல்லப்பட்டனர். அங்கே தேர்தல் பொறுப்பாளரான அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். தலைமையில் நடந்த கூட்டத்தில், சேர்மன் பதவிக்கென்று தலைமை அறிவித்த வேட்பாளர்களுக்கே வாக்களிக்க வேண்டும். மாற்றி வாக்களித்தால் அவர்களுக்கு தேர்தல் செலவாக கட்சி, கொடுத்த தொகையைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று கறாராகப் பேசப்பட்டதாம். தவிர சேர்மன் பொறுப்பை வசப்படுத்த தேவையான சுயேட்சைகளை நம் பக்கம் கொண்டுவருவதற்கு பெரிய தொகை செலவாகியிருக்கிறது அதனை வரும் காலங்களில் நகராட்சியின் டெண்டர் காண்டிராக்ட்களின் கொசுறு மூலமே சரிக்கட்ட வேண்டிய நிலை என்பதால், கவுன்சிலர்கள் யாரும் ஒருவருடம் காண்ட்ராக்ட், கமிசன்களில் கண்டிப்பாகத் தலையிடக் கூடாது என்று கண்டிப்பான கட்டளையும் விடப்பட்டுள்ளதாம். நிலைமை இப்படிப் போய்க் கொண்டிருந்த நேரத்தில் சேர்மன் பதவி பொது என்றாகிவிட்டது. அதனால் வைஸ்சேர்மன் பதவியை நகரின் அடுத்த மெஜாரிட்டி எண்ணிக்கையிலிருக்கும் எங்கள் பட்டியலின சமூகத்திற்கு ஒதுக்கவேண்டும் என்று தி.மு.க.வின் பட்டியலின சமூக கவுன்சிலர்கள் கோரிக்கையை வைக்க, இதனையும் சந்திக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளிப்பட்டிருக்கிறது தி.மு.க.


இதற்கிடையே தி.மு.க.வின் மூவ்களை உளவு பார்த்த அ.தி.மு.க. தரப்புகள், தி.மு.க.வின் கூடாரத்திற்குள்ளேயே புகுந்து உள்ளடியாக 3 கவுன்சிலர்களை தங்கள் பக்கம் சைலன்ட்டாகத் திருப்பியிருக்கிறது. மறைமுகத் தேர்தல் நாள் தவிப்பும் பதற்றமுமாக இருந்தது.

 

DMK councilors who were out of breath!
உமா மகேஸ்வரி

 

அன்றைய தினம் தி.மு.க. தரப்பில் 18 கவுன்சிலர்களும், அ.தி.மு.க. தரப்பில் 12 என்ற அளவில் வந்திருக்கிறார்கள். தி.மு.க. தரப்பில் வெற்றி உறுதி என்றிருக்க, கட்சி அறிவித்தபடி தி.மு.க. தரப்பில் உமா மகேஸ்வரியும், அ.தி.மு.க தரப்பில் முத்துலெட்சுமியும் சேர்மன் பதவிக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்ததையடுத்து ஓட்டெடுப்பிற்கு விடப்பட்டதில், இரண்டு கட்சிகளுமே 15 என்ற சம அளவில் வாக்குகளைப் பெற தி.மு.க. தரப்பிற்கு ஷாக். சேர்மன் பொறுப்பை உறுதிசெய்ய முடியாத நிலை உருவாகியிருக்கிறது. இதையடுத்து தேர்தல் அதிகாரியான ஜெயப்பிரியா இரண்டு கட்சிகளின் உறுப்பினர்களின் சம்மதத்துடன் திருவுளச்சீட்டுப் போட, திக் திக் நொடியில் திருவுளச் சீட்டில் தி.மு.க.வின் உமா மகேஸ்வரியின் பெயர் வர அவர் நகர்மன்றத் தலைவியான பிறகே தி.மு.க.வினரின் சுவாசம் சீராகியிருக்கிறது. அதே சமயம் தங்களின் 18 கவுன்சிலர்களில் 3 பேர் விலை போய் அ.தி.மு.க.விற்கு வாக்களித்தது கண்டு தி.மு.க.விற்கு டன் கணக்கில் அதிர்ச்சி.

 

மாலையில் வைஸ் சேர்மன் தேர்வின்போது தி.மு.க.வின் பட்டியலின சமூகப்பிரிவு கவுன்சிலர்கள் அப்பதவியைத் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று தி.மு.க. தரப்பை வலியுறுத்த, அவர்களை தொகுதியின் தி.மு.க. எம்.எல்.ஏ.வான ராஜா சமாதானப்படுத்தியிருக்கிறார். வைஸ் சேர்மன் தேர்வின்போது தி.மு.க. தரப்பில் சரவணக்குமாரை வைஸ் சேர்மன் பொறுப்பிற்கு நிறுத்த அ.தி.மு.க.வின் தரப்பில் வைஸ் சேர்மன் பதவிக்கு கண்ணன் போட்டியிட, இறுதியாக வாக்கெடுப்பில் தி.மு.க. 13 வாக்குகளைப் பெற, அ.தி.மு.க.வோ 16 வாக்குகளைப் பெற்று அ.தி.மு.க.வின் கண்ணன் வைஸ் சேர்மனாகிவிட்டார்.

 

tt
கண்ணன்

 

காலையில் நடந்த சேர்மன் தேர்வில் தி.மு.க. 15 கவுன்சிலர்களின் வாக்குகளைப் பெற்ற நிலையில் மாலையில் வைஸ் தேர்வில் தி.மு.க. தரப்பு கவுன்சிலர் ஒருவர் (புனிதா) வராமல் போக, அடுத்து தி.மு.க. தரப்பிலிருந்து ஒருவர் அணிமாறி அ.தி.மு.க.விற்கு வாக்களிக்கவே அ.தி.மு.க. 16 வாக்குகளைப் பெற்று வைஸ் பதவியைப் பிடிக்க, தி.மு.க அதனை இழக்க நேரிட்டுள்ளது என்கிறார்கள்.