Advertisment

முதலில் எண்ணப்படும் தபால் வாக்குகள்; தொடங்கியது வாக்கு எண்ணிக்கை

Postal ballots are counted first; Counting of votes started

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை பல்வேறு பரபரப்புகளைக் கடந்து இன்று நடைபெறுகிறது. அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 77 பேர் போட்டியிட, இடைத்தேர்தல் களம் பிரச்சாரத்துடன் சூடுபிடித்த நிலையில், கடந்த 27 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

Advertisment

திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 74.79 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஈரோடு சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று வாக்குகள் எண்ணப்பட இருக்கின்றன. வாக்கு பெட்டிகள் வைத்திருக்கப்படும் மையத்திற்கு துப்பாக்கியுடன் கூடிய மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.

Advertisment

தற்பொழுது வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. இரண்டு அறைகளில் 16 மேஜைகளில் நடக்கும் 15 சுற்று வாக்கு எண்ணிக்கையில் சுமார் 100 ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக பதிவான 392 தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்ட பின்னர் இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட இருக்கிறது. காலையில் சுமார் 9 மணி வாக்கில் முதல் சுற்று முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

byelection Erode
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe