வழக்கம்போல் பணியில் ஈடுபடும் தபால் நிலைய ஊழியர்கள்..! (படங்கள்)

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஏப்ரல் 20-ம் தேதி முதல் முக்கியமான அரசு துறைகள் மற்றும் நிறுவனங்கள் 50% ஊழியர்களைக் கொண்டு இயங்கும் எனவும் அரசு அறிவித்திருந்தது. அதன்படி, நேற்று(20.04.2020) தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள் இயங்க துவங்கின.

சென்னை, திருவான்மியூர் பகுதியில் உள்ள கிளை தபால் நிலைய ஊழியர்கள் வழக்கம்போல் அலுவலகத்திற்கு வந்து பணிகளில் ஈடுபட்டனர்.

corona virus Postal staff
இதையும் படியுங்கள்
Subscribe