Skip to main content

இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம் தகவல்

Published on 24/04/2018 | Edited on 24/04/2018

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு  வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக இன்று தமிழகம் மற்றும் புதுவையில் இடியுடன் கூடிய மழைக்கு உள்ளதாகவும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என  சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

rain

 

கடந்த 24 மணி நேரத்தில் கூடலூர் பஜாரில் அதிகபட்சமாக 2 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. 

மேலும் இன்று சுமார் இரவு 11.30மணி வரை கன்னியகுமாரி, ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதிகளில் கடல் சீரற்றம் அதிகமாக இருக்கும். சுமார் 2.6 மீட்டர் வரை கடல் அலைகள் எழ வாய்ப்புள்ளதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சார்ந்த செய்திகள்