வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் சில இடங்களில் இடியுடன் கூடியமழைக்கு வாய்ப்புள்ளதாகசென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக இன்று தமிழகம் மற்றும் புதுவையில் இடியுடன் கூடியமழைக்கு உள்ளதாகவும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனசென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கூடலூர் பஜாரில் அதிகபட்சமாக 2 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மேலும் இன்று சுமார்இரவு 11.30மணி வரைகன்னியகுமாரி, ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதிகளில் கடல் சீரற்றம் அதிகமாக இருக்கும்.சுமார் 2.6 மீட்டர் வரை கடல் அலைகள் எழ வாய்ப்புள்ளதால்மீனவர்கள் மீன்பிடிக்ககடலுக்கு செல்லவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.