Advertisment

அடுத்த 24 மணிநேரத்தில் புயல் உருவாக வாய்ப்பு!!

 The possibility of a storm

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணிநேரத்தில் புயலாகமாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisment

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. ஆந்திராவின் ஓங்கோல் காக்கிநாடா இடையே வரும் டிசம்பர் பதினேழாம் தேதி பிற்பகலில் இந்த புயல் கரையை கடக்க கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புயல் காரணமாக வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும். குறிப்பாக வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் டிசம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். வட தமிழக கடலோரப் பகுதியில் ஒரு சில இடங்களில் மழையும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Storm rain weather
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe