Skip to main content

பொற்பனைக்கோட்டை அகழாய்வு... ஜனவரி 31-க்குள் முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவு!

Published on 21/12/2020 | Edited on 22/12/2020

 

 

தென்னகத்தில் அதிகமான தொல்லியல் எச்சங்கள் கண்டறியப்பட்டது புதுக்கோட்டை மாவட்டத்தில் தான். எந்த ஊரில் பார்த்தாலும் ஏதாவது ஒரு வரலாற்றுச் சான்று கண்டறியப்பட்டு வருகிறது.

 

இந்த நிலையில் புதுக்கோட்டை அருகே உள்ள சங்க காலத்தைச் சேர்ந்த தமிழர்களின் தொன்மைச் சின்னமாகக் கருதப்படும் பொற்பனைக்கோட்டையை, தொல்லியல் அகழாய்வு செய்ய வேண்டுமெனக் கடந்த 2019-ஆம் ஆண்டு, புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத் தலைவர் கீழப்பனையூர் கரு.ராஜேந்திரன், மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடர்ந்திருந்தார். வழக்கை மூத்த வழக்கறிஞர் கணபதி சுப்பிரமணியம் நடத்தினார். இந்த நிலையில் பொற்பனைக்கோட்டைக்கு வந்து பலமுறை மேலாய்வு செய்த சென்னை திறந்தநிலை பல்கலைக்கழக ஆய்வாளர்கள் அகழாய்வு செய்தால், தமிழர்களின் நாகரீக வரலாறு கண்டறியப்படலாம் என்று இந்தியத் தொல்லியல் துறையிடம் அகழாய்வு செய்ய அனுமதி கேட்கப்பட்டது.

 

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதியரசர்கள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (21.12.2020), இதுகுறித்து வருகின்ற ஜனவரி 31-ஆம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்க இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

மேலும் ஏற்கனவே பொற்பனைக் கோட்டையில் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் சார்பாகக் கள மேலாய்வு மேற்கொண்டு அங்கு அகழ்வாய்வு மேற்கொள்ள மத்திய அரசுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், தமிழக அரசும் அதனை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. இந்நிலையில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகமே இந்த ஆய்வை மேற்கொள்வது குறித்தும் முடிவெடுக்க மத்திய தொல்லியல் துறைக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

இந்த உத்தரவுப்படி பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு செய்தால், தமிழர்களின் தொன்மை வரலாறுகள் வெளிக் கொண்டுவரப்படும்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.