Skip to main content

சுர்ஜித்தின் மரணத்தில் இருந்தாவது பாடம் படிக்குமா தமிழ்நாடு அரசு? 

Published on 01/11/2019 | Edited on 01/11/2019

ஆழ்துளை கிணறுகளை மூடுவதற்கு பதிலாக அதை பாதுகாப்பான முறையில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பாக (Artificial Ground water Recharge Wells) மாற்றி அமைக்க வேண்டும் என பூவுலகின் சுந்தர்ராஜ் வலியுறுத்தல். 
 

அவர் பேசியதாவது, உலகிலேயே இந்தியாவில் தான் அதிகம் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது என சொல்கிறது உலக வங்கியின் ஆய்வு, உலகம் முழுவதும் உபயோகப்படுத்தப்படும் நிலத்தடி நீரில் நான்கில் ஒரு பங்கை இந்தியா மட்டும் பயன்படுத்துவதாக, அதாவது ஆண்டிற்கு சுமார் 230 Km3 நிலத்தடி நீரை உறுஞ்சிகிறது. இந்தியாவின் குடிதண்ணீர் தேவைகளில் 85% மும், விவசாயத் தேவைகளில் 65% மும் நிலத்தடி நீரால் பூர்த்தி செய்யப்படுகிறது. (Source: National Institute of Hydrology Report). (இந்த அவலத்திற்கு முக்கிய காரணம் பசுமை புரட்சி திட்டத்திற்கு பிறகு நவீன விவசாய முறைகளிலும் நீர் மேலாண்மையிலும் கொண்டுவரப்பட்ட மாற்றங்களும் தான்) இதில் நாம் கவனிக்க வேண்டியது.

POOVULAGIN NANBARGAL SUNDARRAJAN TRICHY CHILD SURJITH


இந்தியாவிலே அதிகம் நிலத்தடி நீரை பயன்படுத்தும் மாநிலமாக தமிழகம் மாறியிருக்கிறது. நாம் தமிழகத்தின் 77% நிலத்தடி நீரை ஆழ்துளை கிணறுகள் மூலம் உறுஞ்சுகிறோம்.சதுர கிலோ மீட்டர்க்கு அதிகபட்சம் 50 பம்ப்செட் கள் இருக்கலாம் ஆனால் இங்கு 175 முதல் 200 பம்ப்செட்டுகள் இருக்கின்றன. தமிழ்நாட்டின் Annual Rainwater recharge rate = 19.81 Km3 yr-1 ஆனால் தமிழ்நாட்டின் நிலத்தடி நீர் உறிஞ்சப்படும் அளவு 21.4 Km3 yr-1.அதாவது நிலத்தடி நீர் நிரம்புவதை காட்டிலும் 8% அதிகம் நாம் உறுஞ்சிக்கொண்டு இருக்கிறோம். தர்மபுரி, அரியலூர், சேலம், வேலூர், திருச்சி, திருவண்ணாமலை, பெரம்பலூர் போன்ற மாவட்டங்கள் ஏற்கனவே நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் கடுமையாக பாதிக்கபட்டிருகின்றன. 


இந்த நிலைக்கு காரணம் நாம் நிலத்தடி நீர் recharge செய்வது பற்றிய அக்கறை இல்லாமல் ஆழ்துளை கிணறு போட்டு அதை நம் தேவைகளுக்காக உறியத்தொடங்கியதும் நீர் மேலாண்மையில் செய்த தவறுகளும் தான். இதன் விளைவு இன்று நமக்கு கிடைக்கும் மழையில் 80% க்கும் மேலான மழை நீர் நிலத்தடியை சென்று சேராமல் கடலில் கலந்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால் தமிழகத்தின் நிலத்தடி நீர் முற்றிலும் வற்றிவிடும் (Complete desertification of ground water) அபாயம் இருப்பதாக அறிஞர்கள் எச்சரிக்கிறார்கள்.  

இந்த நிலைக்கு செல்லாமல் தவிர்பதற்கு Artificial Ground Water Recharge முறையை நடைமுறை படுத்துவது சிறந்த தீர்வாக இருக்கும். புதிதாக ஒரு Artificial Ground Water Recharge well ஐ அமைப்பதற்கு அதிக செலவாகும். ஆனால் ஏற்கனவே கைவிடப்பட்டிருக்கும் “Failed Borewell” களை பாதுகாப்பான முறையில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பாக மாற்றுவதற்கு 10,000 முதல் 15,000 ரூபாய்கள் மட்டுமே ஆகும். எனவே தமிழ்நாட்டிலுள்ள கைவிடப்பட்ட Failed Borewell களை Artificial Ground Water Recharge wells ஆக அரசாங்கம் மாற்ற கோரி நீண்டகாலமாகவே பூவுலகின் நண்பர்கள் சார்பாக கோரிக்கை வைத்து வருகிறோம். 

POOVULAGIN NANBARGAL SUNDARRAJAN TRICHY CHILD SURJITH



இந்நிலையில் சுர்ஜித் மறைவிற்கு பிறகு 29.10.2019 அன்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் போடப்பட்ட பயன்படாத நிலைக்கு மாறிய ஆழ்துளைக் கிணறுகள், திறந்தவெளி கிணறுகள், மற்றும் நீர் உறுஞ்சி கிணறுகள் ஆகியவற்றை 24 மணி நேரத்த்தில் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்பாக மாற்ற அரசு உத்தரவிட்டிருக்கிறது.. 
 

அரசின் இந்த நடவடிக்கையை பூவுலகின் நண்பர்கள் சார்பாக வரவேற்கிறோம், அதே சமயம் தனி நபர்களால் போடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளையும் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்பாக மாற்ற அரசு நில உரிமையாளருக்கு மானியம் தந்து திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இதை நடைமுறை படுத்துவதின் மூலம் தான் இந்த பிரச்சனைக்கான தீர்வை இந்த பிரச்சனையில் இருந்தே தீர்க்க முடியும்.
 

ஆழ்துளை கிணறுகளை மூடுவதற்கு பதிலாக அதை பாதுகாப்பான முறையில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பாக (Artificial Groundwater Recharge Wells)மாற்றி அமைப்பது தான் இன்னொறு சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுவதையும், இன்னொரு பிரிட்டோ 650 அடி ஆழ கிணற்றை தோண்டி கைவிடுவதையும் தடுக்கும்... சுர்ஜித்தின் மரணத்தில் இருந்தாவது பாடம் படிக்குமா தமிழ்நாடு அரசு? இவ்வாறு பேசினார்.



 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.