Skip to main content

தரமற்ற உணவு - கண்டுகொள்ளாத அதிகாரிகள்

Published on 18/08/2022 | Edited on 18/08/2022

 

ff

 

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகே பிரபலமான அசைவ உணவகம் ஒன்று இயங்கிவருகிறது. இந்த உணவகத்தில் கடந்த 16ஆம் தேதி மதியம் மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் சாப்பிட்டுள்ளார். அவர் சாப்பிட்ட காடை கறியில் புழு இருந்திருக்கிறது. இதை அங்கு வேலை செய்யும் சப்ளை ஊழியர்களிடம் அவர் சொல்லியுள்ளார். அதற்கு அவர்கள் முறையாக பதில் சொல்லவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் வாடிக்கையாளருக்கும் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

 

அவர் இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு போன் மூலம் இந்தத் தகவலை கூறியுள்ளார். அதற்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் புகாராக தந்தால் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளனர். அதன்பின் அவர், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அதேசமயம் உணவக நிர்வாகம், தங்களுக்கு தெரிந்தவர்கள் மூலம் புகார் சொன்னவரிடம் சமாதானம் பேசி புகார் தராமல் பார்த்துக்கொண்டுள்ளனர். இதுகுறித்து செய்தி வெளியிட்ட தொலைக்காட்சி, பத்திரிகை செய்தியாளர்களை உணவக நிர்வாகத்தின் சார்பில் சிலர் எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. 

 

ஆரணி பகுதியில் தரமற்ற அசைவத்தில் சமைத்த உணவை விற்பனை செய்து இரண்டு குழந்தைகள் இறந்துள்ளனர். இது தொடர்பாக இரண்டு பிரியாணி ஓட்டல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது பிரபலமான மற்றொரு ஹோட்டலில் புழு உள்ள உணவு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

தரமற்ற உணவுகளைத் தயாரிக்கும் ஓட்டல் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது. 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆரணி காங்கிரஸ் எம்.பி. கடலூர் வேட்பாளராக அறிவிப்பு!

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Arani Congress MP Cuddalore candidate announcement

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் கடலூர், குறிஞ்சிப்பாடி, விருத்தாச்சலம், பண்ருட்டி, திட்டக்குடி, மற்றும் நெய்வேலி சட்டமன்ற ஆகிய 6 தொகுதிகளை உள்ளடக்கியது. இதில் 14 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இந்த தொகுதியில் வருகிற பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் சிவக்கொழுந்து போட்டியிடுகிறார். அதேபோல் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் இயக்குநர் தங்கர்பச்சான், நாம் தமிழர் கட்சி சார்பில் மணிவாசகம் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இதில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆரணி தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றி வரும் மருத்துவர் எம்.கே விஷ்ணுபிரசாத் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் செயல் தலைவராக உள்ளார். மேலும் இவர் கடந்த 2006 முதல் 2011 வரை செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 1972 ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநிலத் தலைவர் கிருஷ்ணசாமி ஆவார். இவருக்கு மனைவி, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இவர் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸின் மைத்துனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் செய்யாறு தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த காலத்தில் செய்யாறு சிப்காட் தொழில் பூங்காவை நிறுவுவதில் முக்கிய பங்காற்றியுள்ளார். மேலும் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்த புறவழிச்சாலை அனுமதி பெற்று ஓச்சேரி பாலத்தை கட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆரணி தொகுதியில் தி.மு.க. போட்டியிடுவதால் இவர் கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Next Story

சிறுமிக்கு பாலியல் தொல்லை; கஞ்சா இளைஞருக்கு தர்மஅடி

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
incident in aarani

அண்மையில் புதுச்சேரியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி கஞ்சா போதை இளைஞர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட முயன்று கொலை செய்யப்பட்டு சாக்கடையில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனைத் தொடர்ந்து புதுச்சேரி மட்டுமல்லாது தமிழகத்திலும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் வலுத்து வருகிறது.

இந்நிலையில் திருவண்ணாமலையில் இதே போன்று கஞ்சா இளைஞர் ஒருவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக தகவல் வெளியான நிலையில் இளைஞரை பிடித்த பொதுமக்கள் சரமாரியாக தாக்கி தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியைச் சேர்ந்த இளங்கோ என்ற அந்த இளைஞர் ஆறாம் வகுப்பு பயின்று வரும் மாணவிக்கு கஞ்சா போதையில் பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதை அறிந்த அந்தபகுதி மக்கள் அந்த இளைஞரை சரமாரியாக தாக்கி, ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து கஞ்சா இளைஞர் இளங்கோவிடம் விசாரணை செய்த போலீசார் விசாரணையின் அடிப்படையில் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர். ஆரணியில் நிகழ்ந்த இந்த சம்பவம்  அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.