Skip to main content

பூண்டி ஏரியில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு... நிரம்பியது மதுராந்தகம் ஏரி!

Published on 28/11/2020 | Edited on 28/11/2020

 

 

poondi and madurantakam lakes water level peoples


திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 1,000 கனஅடியில் இருந்து 6,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 7,100 கனஅடியாக குறைந்துள்ள நிலையில், கொசஸ்தலை ஆற்றில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர் நீர்வரத்தால் பூண்டி ஏரியின் மொத்த உயரமான 35 அடியில் நீர்மட்டம் 33.7 அடியாக உயர்ந்துள்ளது. 

 

அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவான 23.3 அடியை எட்டியது. மதுராந்தகம் ஏரிக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வந்துக் கொண்டிருக்கும் நிலையில், ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்படவில்லை. 

 

இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூண்டி மற்றும் மதுராந்தகம் ஏரியை சுற்றியுள்ள பகுதி மக்களுக்கும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கையை பொதுப்பணித்துறை விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மேட்டூரில் நீர் திறப்பு! 

Published on 04/08/2022 | Edited on 04/08/2022

 

Water opening in Mettur more than in four years!

 

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, கர்நாடகா மாநிலத்தின் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, தமிழகம்- கர்நாடகா எல்லையான பிலிகுண்டுலுவில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. மேலும், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 2 லட்சம் கன அடியைத் தாண்டியுள்ள நிலையில், வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 2.10 லட்சம் கன அடியாக உள்ளது. 

 

மேட்டூர் அணையில் இருந்து கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு காவிரியாற்றில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதன்படி, அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 2 லட்சத்தில் இருந்து 2.10 லட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018- ஆம் ஆண்டு 2 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டிருந்தது. கடந்த 1961- ஆம் ஆண்டு 2.75 லட்சம் கன அடி நீரும், 2008- ஆம் ஆண்டு 2.31 லட்சம் கனஅடி நீரும் திறக்கப்பட்டிருந்தது. 

 

இதனிடையே, மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் பாலம் அருகே உள்ள புதுப்பாலத்தில் போக்குவரத்துக்கு தடை விதித்து சார் ஆட்சியர் வீர்பிரதாப் சிங் உத்தரவிட்டுள்ளார். மேலும், புதுப்பாலத்தில் மக்கள் நடந்து செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

 

Next Story

கரைபுரண்டோடும் வெள்ளத்துக்கு மத்தியில் சிக்கிய இளைஞர்கள்...மீட்டத் தீயணைப்புப் படையினர்! 

Published on 16/07/2022 | Edited on 16/07/2022

 

Youth trapped in the middle of overflowing flood... Firefighters rescue!

 


காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் முழுக் கொள்ளவை எட்டின. இதையடுத்து, இந்த அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் அதிகரித்துள்ள நிலையில், அணையின் பாதுகாப்பை கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

 

கரையோரம் வசிக்கும் மக்கள், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், அணை நீர் வரும் பகுதிகள் மற்றும் நீர் வெளியேற்றும் பகுதிகளில் யாரும் நின்றுக் கொண்டு செல்பி எடுக்க வேண்டாம், குளிக்க வேண்டாம் என சேலம் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. 

 

இந்த நிலையில், இன்று (16/07/2022) மாலை 04.00 மணி நிலவரப்படி, மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு வினாடிக்கு 1,13,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 90,000 கனஅடியும், டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 23,000 கனஅடி நீரையும் திறந்து விடப்பட்டுள்ளன. 

 

இந்த நிலையில், மேட்டூர் அணையின் 16 கண் மதகு பகுதியில் உள்ள உபரிநீர் போக்கி கால்வாயில் செல்பி எடுக்க சென்ற போது மூன்று இளைஞர்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். இது குறித்து தகவலறிந்த மாவட்ட காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கரைபுரண்டோடும் வெள்ளத்துக்கு மத்தியில் சிக்கிய மூன்று இளைஞர்களை, கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.

 

இளைஞர்களைப் பத்திரமாக மீட்ட தீயணைப்புப்படை மற்றும் காவல்துறைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.