Skip to main content

விஷம் கொடுத்தும் புருஷன் சாகல... காதலனிடம் ஃபோனில் சொன்ன மனைவி... விசாரணையில் அதிர்ந்த போலீசார்... 

Published on 27/07/2020 | Edited on 27/07/2020

 

Police

 

சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த கார் டிரைவர், தரணிதரன். இவருக்கு பவானி என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். கணவர் தரணிதரன் கடந்த 22ஆம் தேதி கடன் தொல்லைக் காரணமாக தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக பவானி பூந்தமல்லி போலீசார் புகார் செய்தார். 

 

இந்தப் புகாரையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், தரணிதரன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தரணிதரன், கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது.

 

இதையடுத்து போலீசார் ரகசிய விசாரணையில் ஈடுபட்டனர். இதனால் பவானி மீது சந்தேகம் அடைந்த போலீசார், பவானியிடம் விசாரணை நடத்தினர். போலீசாரின் பல்வேறு கிடுக்கிப்பிடி கேள்விகளுக்கு பவானி முன்னுக்குப்பின் முரணாகப் பதில் கூறினார். பவானியின் செல்போன் அழைப்புகளைச் சோதனை செய்தபோது, அதில் ஒரு நபர் மட்டும் அடிக்கடி பேசி இருப்பதும், தரணிதரன் இறப்பதற்கு முன்பு அந்த நபர் பவானி வீட்டுக்கு வந்து சென்றதும் தெரியவந்தது.

 

பவானியிடம் தீவிரமாக விசாரித்தபோது, தரணிதரனின் நண்பரான தினேசும் டிரைவராக உள்ளார். இருவரும் அடிக்கடி ஒன்றாக மது அருந்துவார்கள். நாளடைவில் தரணிதரன் வீட்டிற்கு தினேஷ் வந்து செல்லும் அளவுக்கு நட்பு நீடித்தது. தினேஷ் ஏற்கனவே திருமணமாகி மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்ததால், பவானி மீது கண் வைத்துள்ளார் தினேஷ். இதனால் தரணிதரன் வீட்டுக்கு தினேஷ் அடிக்கடி வந்து செல்வார். அப்போது தினேசுக்கும், பவானிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, பின்னர் முறை தவறிய உறவாக மலர்ந்துள்ளது.  

 

தங்களது சந்திப்புகளுக்கு தரணிதரன் இடையூறாக இருப்பதாக பவானியும், தினேஷும், அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர். பூச்சி மருந்தை உணவில் கலந்து கொடுக்க முடிவு செய்தனர். அதன்படி தரணிதரனுக்கு சாப்பாட்டில் பூச்சி மருந்தைக் கலந்து கொடுத்துள்ளார், பவானி. வழக்கம்போல உணவு அருந்திவிட்டு தூங்கிய தரணிதரன், மறுநாள் காலையில் எழுந்து வாந்தி எடுத்துவிட்டு, காஃபி குடித்துவிட்டு மீண்டும் தூங்கியுள்ளார். 

 

உணவில் விஷம் கலந்து கொடுத்தும் தரணிதரன் சாகவில்லை என்றதும் ஆத்திரம் அடைந்த பவானி, காதலன் தினேசை போனில் தொடர்புகொண்டு, விஷம் கொடுத்தும் புருஷன் சாகல, எப்போதும் போலத்தான் இருக்கிறார். உடனே நீங்கள் வாருங்கள் என அழைத்துள்ளார். காதலன் வருவதற்குள் குழந்தைகளை தாத்தா வீட்டிற்கு அனுப்பி வைத்த பவானி, காதலன் வந்ததும், காதலனுடன் சேர்ந்து கணவரைத் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். 

 

படுத்துக்கிடந்த தரணிதரனின் கழுத்தைத் துப்பட்டாவால் நெரித்துக் கொலை செய்தார். தரணிதரன் துடிதுடித்துப் பரிதாபமாக இறந்தார். பின்னர் அவரே தற்கொலை செய்து கொண்டதுபோல் துப்பட்டாவின் இரண்டு பகுதிகளையும் தரணிதரன் கையில் சுற்றிவிட்டு தினேஷ் அங்கிருந்து சென்றுவிட்டார்.

 

பின்னர் கொலையை மறைப்பதற்காக கடன் தொல்லையால் தனது கணவர் தனக்குத் தானே துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி தற்கொலை செய்துகொண்டது போல் பவானி நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது. 

 

கைதான இருவரும் போலீசார் முன்னிலையில் தரணிதரனை கொலை செய்தது எப்படி? என நடித்துக் காட்டினார்கள். அதனை போலீசார் வீடியோ பதிவு செய்தனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

யோகா மாஸ்டர் அடித்து கொலை; விசாரணையில் பகீர்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

கராத்தே மாஸ்டர் காணாமல் போன சம்பவத்தில், கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டது  சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியிலுள்ள கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர் அந்த பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு கராத்தே மாஸ்டராகவும், யோகா மாஸ்டராகவும் பணியாற்றி வந்தார். இவரிடம் பல்வேறு குழந்தைகள் கராத்தே மற்றும் யோகா பயிற்சிகள் எடுத்து வந்த நிலையில் கராத்தே மாஸ்டர் லோகநாதனை கடந்த 13ஆம் தேதியிலிருந்து காணவில்லை என அவரது மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்ததோடு காணாமல்போன லோகநாதன் தேடி வந்தனர். லோகநாதன் வைத்திருந்த செல்போனில் அவருடன் இறுதியாக பேசியது யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் ஓஎம்ஆர் சாலையில் உள்ள நாவலூர் காரனை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் -கஸ்தூரி தம்பதியிடம் செல்போனில் பேசியது தெரியவந்தது.

சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்த விசாரித்தபோது யோகா மாஸ்டர் லோகநாதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட பகீர் தகவல் வெளிவந்தது. செம்மஞ்சேரி பூங்காவில் வைத்து லோகநாதன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கராத்தே, யோகா பயிற்சிகளை  கொடுத்து வந்த நிலையில் சுரேஷ்-கஸ்தூரி தம்பதியின் 11 வயது மகன் லோகநாதனிடம் பயிற்சிக்காக சேர்க்கப்பட்டு பயிற்சி எடுத்து வந்தான். அதே நேரம் கஸ்தூரியும் அவரிடம் யோகா பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

இந்நிலையில் கஸ்தூரியிடம் லோகநாதன் பாலியல் ரீதியாக தொல்லையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் லோகநாதனின் பயிற்சி வகுப்புக்கு செல்வதை கஸ்தூரி தவிர்த்து வந்துள்ளார். ஆனால் இருப்பினும் மொபைல் மூலம் கஸ்தூரியை தொடர்பு கொண்ட லோகநாதன் யோகா வகுப்புக்கு வரும்படி தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கஸ்தூரி இதுகுறித்து கணவரிடம் தெரிவிக்க இருவரும் சேர்ந்து கராத்தே மாஸ்டர் லோகநாதன் கொலை செய்ய திட்டமிட்டனர்.

அவரை மொபைல் மூலம் தொடர்புகொண்டு காரனை பகுதிக்கு வரவழைத்து அடித்து கொலை செய்ததோடு அங்குள்ள பாழடைந்த கிணற்றில் உடலை வீசிவிட்டுச் சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கிணற்றில் இருந்த லோகநாதனின் உடலை கயிறு மூலம் கட்டி வெளியே கொண்டு வந்தனர். யோகா மாஸ்டர் அடித்து கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு; 70 பேர் உயிரிழப்பு

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
 Indiscriminate shooting; 70 people lost their lives

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு  பொறுப்பேற்றுள்ளது. உலக அளவில் பல்வேறு நாடுகளில் இருந்து இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இசை நிகழ்ச்சி அரங்கில் எதிர்பாராதவிதமாக பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது. இந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். 140க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதற்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளத்தின் வாயிலாக இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 'இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கு இந்திய அரசும், இந்திய மக்களும் துணை நிற்போம்' எனத் தெரிவித்துள்ளார்.