Skip to main content

குளங்கள் நிரம்பியது... முயற்சித்த இளைஞர்களின் மனமும் மகிழ்ச்சியில் நிறைந்தது! 

Published on 24/10/2019 | Edited on 24/10/2019

தமிழ்நாட்டில் உள்ள ஏரி, குளம், குட்டை, வரத்து வாய்க்கால் என்று நீர்நிலைகள் பல ஆண்டுகுளாக சீரமைக்க தவறவிட்டதால் மழைத் தண்ணீரை சேமிக்க முடியாமல் நிலத்தடி நீர் நாளுக்கு நாள் கீழே சென்றுவிட்டது. மற்றொரு பக்கம் தண்ணீரை சேமித்து வைக்கும் ஆற்று மணலை கொள்ளைக் கும்பல் பங்குபோட்டு அள்ளிவிட்டதாலும் இன்று குடிதண்ணீருக்கு குடங்களை எடுத்துக் கொண்டு நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுவிட்டது.

 

 The pools are filled


இந்தநிலையில்தான் வெளிநாடு, வெளியூர்களுக்கு வேலைக்காகவும், தொழில் செய்யவும் சென்ற இளைஞர்கள், சொந்த ஊர்களைப் பற்றி நினைத்துப் பார்த்தார்கள். சொந்த ஊரில் உள்ள இளைஞர்களுடன் இணைந்து மீண்டும் நிலத்தடி நீரை மீட்போம் என்று சபதம் எடுத்தனர். பலர் தங்கள் வேலைகளை உதறிவிட்டு சொந்த ஊருக்கு வந்தார்கள். சிலர் பணி செய்யும் இடத்தில் இருந்தே நீர்நிலை சீரமைப்பு பணிகளை தொடர்ந்தனர்.

 

 The pools are filled

 

தஞ்சை மாவட்டம் களத்தூர் கிராமத்தில் உயிர் துளியாக தொடங்கிய நீர்நிலை மீட்பு பணி அடுத்து ஒவ்வொரு கிராமமாக பரவியது. கைஃபா என்ற அமைப்பு உருவாகி 560 ஏக்கர் பரப்பளவுள்ள பேராவூரணி பெரிய குளத்தை மீட்டார்கள். தண்ணீரை நிறைத்தார்கள். ஒட்டங்காட்டில் கலாம் நற்பணி மன்றத்தினர் பெரிய குளத்தை மீட்டார்கள். கொத்தமங்கலத்தில் இளைஞர் மன்றத்தினர் பல குளங்களை மீட்டனர்.

ஏம்பல் கிராமத்தில் முன்னாள் அரசு பள்ளி மாணவர்கள் சங்கம் உருவாகி பல்வேறு தடைகளைத் தாண்டி இதுவரை 8 குளங்களையும் அதற்கான வரத்து வாய்க்கால்களையும் மீட்டதுடன் பணியை தொடர்ந்து செய்து வருகின்றனர். சீரமைக்கப்பட்ட குளங்களில் தண்ணீர் நிரம்புவதைப் பார்த்து ஆனந்தமடைந்து அடுத்தடுத்த குளங்களையும் சீரமைக்க வேண்டும் என்று ஆர்வம் கொண்டுள்ளனர்.

 

 The pools are filled

 

பசுமையான விவசாய கிராமமான மறமடக்கியில் பல வருடங்களாக நிலத்தடி நீர் ஆயிரம் அடிக்கு கீழே சென்றதால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் மாற்று வேலைகளுக்கு செல்லத் தொடங்கினார்கள். இந்தநிலையை பார்த்த இளைஞர்கள் மக்கள் செயல் இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கி தங்கள் பங்களிப்போடு உதவி செய்ய முன் வந்தவர்களின் உதவிகளையும் பெற்று தூர்வாரத் தொடங்கினார்கள். 27 நாட்கள் கடும் உழைப்பிற்கு பிறகு பெய்த மழையில் குளம் பாதி நிறைந்ததைப் பார்த்து ஆனந்த கண்ணீர் வடிக்கின்றனர். இதைப் பார்க்கும் போது மற்ற குளங்களையும் சீரமைத்து விரைவில் வறட்சியில்லாத கிராமமாக மறமடக்கியை மீட்போம் என்கிறார்கள் இளைஞர்கள்.

இந்த வரிசையில் நெடுவாசல், மாங்காடு, வடகாடு, செரியலூா், குருவிக்கரம்பை, நாடியம், மருங்கப்பள்ளம் என்று கிராமங்களின் எண்ணிக்கை நீண்டு கொண்டே போகிறது. சீரமைக்கப்படும் நீர்நிலைகளில் பறவைகளுக்காக அடர்வனங்களும், கரைகளையும், நீர்நிலைகளையும் பாதுகாக்க பனை விதைகளையும் புதைத்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.