Skip to main content

கொடநாடு கொள்ளைக்கு 'பூஜை'... விசாரணை வளையத்திற்குள் வரும் 'சாமி'க்கள்! 

Published on 22/09/2021 | Edited on 22/09/2021

 

Pooja for Kodanadu robbery ... Leading Samis appearing for trial!

 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி நள்ளிரவில், ஓம் பகதூர் என்ற பாதுகாவலர் கொலை செய்யப்பட்டு, ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக நீலகிரி மாவட்ட காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக, நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்துவருகிறது. அதேபோன்று இந்த வழக்கு சம்பந்தமான சாட்சிகளிடம் போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டுவருகிறார்கள். 

 

Kodanadu case

 

இந்த வழக்கில் 8வது நபராகச் சேர்க்கப்பட்டுள்ள சந்தோஷ் சாமி, 9வது நபராகச் சேர்க்கப்பட்டுள்ள மனோஜ் என்கிற சாமி ஆகியோர் இன்று (22.09.2021) விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர். இவர்கள் இருவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள். வழக்கில் தொடர்புடைய கனகராஜ் கொள்ளை திட்டம் குறித்து சயானிடம் தெரிவித்த நிலையில், சயான் தனக்கு ஏற்கனவே அறிமுகமான கோவில் பூசாரி மனோஜ் சாமியிடம் கனகராஜை கூட்டிச் செல்கிறார். அப்போது சயானும், கனகராஜும் மனோஜ் சாமியிடம் கொள்ளை திட்டத்தை விவரித்துள்ளனர். இதனை அறிந்துகொண்ட மனோஜ் சாமி அவருக்குத் தெரிந்த மற்றொரு கோவில் பூசாரியான சந்தோஷ் சாமியிடம் கூட்டிச் சென்றுள்ளார். அப்போது இந்தக் கொள்ளை சம்பவத்தை நிகழ்த்த சில தடைகள் இருப்பதாகவும் இதற்கு சில பூஜைகள் செய்ய வேண்டும் எனவும் கூறியதாகவும் கூறப்படுகிறது. சொன்னபடி சில பூஜைகள் செய்ததாகவும் கூறப்படுகிறது.

 

இந்தக் கொள்ளை வழக்கில், வாகனங்கள் மற்றும் ஆட்களை ஏற்பாடு செய்வதில் இருவருக்கும் தொடர்புள்ளதாகப் புகார் உள்ளது. குறிப்பாக சந்தோஷ் சாமி, இந்தக் கொள்ளைக்கு 5 பேரை ஏற்பாடு செய்துள்ளார். தற்போது கனகராஜ் உயிரோடு இல்லாத நிலையில், இந்த இருவரின் வாக்குமூலம் இந்த வழக்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அதேபோல் கொள்ளை சம்பவம் நடைபெற்ற 2017 ஏப்ரல் மாதம் 23ஆம் தேதிக்கு ஒருநாள் முன்பு இருவரும் கோவை வந்துள்ளனர். கொடநாடு கொள்ளை வழக்கில் கொடநாட்டின் 8வது எண் கொண்ட நுழைவு கேட்டில் இருந்த காவலாளி கிருஷ்ணதபாவை கட்டிப்போட்டுக் கண்காணித்த 4 பேரில் இவர்கள் இருவரும் இருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.