டெல்லியில் ஜமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தி பேரணியாகச் செல்ல முயற்சித்தபோது போலீசார் தடுத்து நிறுத்தியதால், வன்முறை வெடித்தது. காவல்துறையினரால் மாணவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.

Advertisment

ponraj question to PM

இதுகுறித்து, அப்துல்கலாம் லட்சிய இந்தியா கட்சியின் தலைமை வழிகாட்டி வெ.பொன்ராஜ், முகநூலில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisment

ponraj question to PM

அகதிகளான முஸ்லீம்களையும், இலங்கைத் தமிழ் இந்து அகதிகளையும், பூட்டான் கிறிஸ்தவ அகதிகளையும் ஒதுக்கிய இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராடும் மாணவர்களை மிருகத்தனமாக தாக்கும் டெல்லி காவல்துறையை ரவுடிகளுக்கு குத்தகைக்கு விட்டு விட்டீர்களா?