Advertisment

கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார் பொன்.ராதாகிருஷ்ணன்!

hb

Advertisment

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை 16 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 33 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவைப் பொறுத்தமட்டில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் கரோனா மிக வேகமாகப் பரவி வருகிறது.

தினமும் 30 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்று தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் அமைச்சர்கள், அதிகாரிகள் என பலர்அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்கிடையே கடந்த வாரம் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கரோனா தொற்று காரணமாக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், ஒரு வார சிகிச்சைக்கு பிறகு அவர் இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

Pon Radhakrishnan corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe