Skip to main content

விபூதியை ஸ்டாலின் அழித்ததற்கு கோவில் பூஜாரிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை? பொன்.ராதா கேள்வி

Published on 24/06/2018 | Edited on 24/06/2018
pon r


ஸ்ரீரங்கம் கோயிலில் மு.க.ஸ்டாலின் தனது நெற்றியில் வைத்த விபூதியை அழித்ததற்கு கோவில் பூஜாரிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பா.ஜ.கவின் பல்வேறு நிகழ்ச்சிகளில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது,

மதுரையில் அமைக்கப்படும் எய்ம்ஸ் மருத்துவமனையால் தமிழகத்தில் 12 மாவட்ட மக்கள் பயன்பெறுவார்கள். இந்த பெருமைகள் அனைத்தும் பிரதமர் நரேந்திர மோடியை சேரும்.

 

 

ஸ்ரீரங்கம் கோவிலுக்கு 2 நாட்கள் முன்பு தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் சென்றிருந்தார். அவர் அங்கு சென்றதற்கான காரணத்தை பத்திரிகைகளும், சமூக ஊடகங்களும் பல்வேறு விதமாக சொல்கின்றன. அவர் கோயிலில் பரிகார பூஜைகள் செய்ததாக கூறப்படுகிறது. காலை 6.15க்கு கோவிலுக்குள் சென்றவர் 8.45 வரை கோவிலுக்குள் இருந்திருக்கிறார்.

கோயிலின் மேற்குவாசல் வழியாக உள்ளே சென்றவருக்கு பூரண மரியாதை கொடுக்கப்பட்டதோடு, ரங்கநாதருக்கு சாத்தப்பட்ட மலர் மாலையும் மு.க.ஸ்டாலினுக்கு அணிவிக்கப்பட்டது. ரங்கநாயகி அம்மையாருக்குடைய பிரசாதமும் ஸ்டாலின் நெற்றியில் பூசப்பட்டது. அப்போது அதை அவர் அழித்தார். இது மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம்.

இறை நம்பிக்கை உடையவர்கள் எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் எந்த வழிப்பாட்டு ஸ்தலத்துக்கும் போக கூடிய முழு உரிமை படைத்தவர்கள். இது ஜாதி, மதம், மொழி, பிராந்தியங்களுக்கோ, அரசியல் கட்சிகளுக்கோ எந்த வித்தியாசமும் கிடையாது. எல்லாரும் சமமாக கருதப்படக் கூடிய இடம் அது.

இறை நம்பிக்கை உள்ளவர்கள் இன்னொரு மதத்தின் வழிப்பாட்டு ஸ்தலத்துக்கு போகலாம். அங்கு தெய்வம் வேறாக இருந்தாலும் நம்பிக்கை ஒன்று தான். ஆனால் வேஷம் போடக்கூடியவா்கள், யாரையோ திருப்திப்படுத்த கூடியவா்கள், தெயவத்தை அவமதிக்க கூடியவா்கள் எந்த காரணத்தையும் கொண்டு எந்த வழிப்பாட்டு ஸ்தலத்துக்கும் அனுமதிக்க கூடாதவர்கள். அந்த பட்டியலில் ஸ்டாலின் சோ்ந்திருக்கிறார்.

ஸ்ரீரங்கம் கோயிலில் திருமணம் மற்றும் காது குத்து நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார். 20 பிராமணா்களுக்கு ஆடைகள் வழங்கியிருக்கிறார். இந்த நிலையில் அவர் சமய சின்னத்தை அழித்திருக்கிறார். அந்த நேரத்தில் அந்த சமய சின்னத்தை ஸ்டாலினுக்கு அளித்த பூஜாரிகள் பட்டர்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதை நான் கண்டிக்கிறேன் என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

“ஓய்வு பெற வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையில் விலகுகிறேன்”- சுப்புலட்சுமி ஜெகதீசன்

Published on 20/09/2022 | Edited on 20/09/2022

 

“Resigning based on desire to retire”- Subbulakshmi Jagatheesan

 

திமுகவில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் அறிவித்துள்ளார். முதல்வர், கட்சி மற்றும் அரசுப்பணிகளை நாடே பாராட்டும் வகையில் செயல்படுத்திக் கொண்டு இருக்கிறார். இது எனக்கு மிகுந்த மன நிறைவை தருகிறது என குறிப்பிட்டுள்ளார்.

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள விலகல் அறிக்கையில், “2009 இல் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பணி காலம் நிறைவு பெற்றதற்கு பிறகு மீண்டும் தேர்தலில் போட்டியிடாமல், கட்சிப் பணிகளை மட்டும் மேற்கொள்வது என்ற எனது முடிவை தலைவர் கலைஞர் அவர்களிடமே தெரிவித்துவிட்டேன்.

 

தலைவர் கலைஞர் மறைவுக்குப்பின். அவர்களின் விருப்பத்தின்படி தலைவர் தளபதி அவர்களை முதலமைச்சர் ஆக்கும் நோக்கத்துடன் கழகப் பணிகளை மட்டும் செய்து வந்தேன்.

 

2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி பெற்று. தலைவர் தளபதி முதலமைச்சராக பொறுப்பேற்று, அரசுப் பணிகளையும், கட்சிப் பணிகளையும் நாடே பாராட்டும் வகையில் சிறப்பாகச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.

 

இது எனக்கு மிகுந்த மனநிறைவைத் தருகிறது. இந்த நிறைவோடு. அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற எனது நீண்ட நாள் விருப்பத்தின் அடிப்படையில் ஆகஸ்டு மாதம் 29ஆம் தேதியன்று பதிவியிலிருந்தும். கட்சியிலிருந்தும் விலகுவதாக எனது விலகல் கடிதத்தை தலைவர் தளபதி அவர்களுக்கு அனுப்பிவிட்டேன்” என  தெரிவித்துள்ளார்.

 

 

Next Story

“ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு முதல் மரியாதை’; முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி

Published on 15/09/2022 | Edited on 15/09/2022

 

'First honor to One Rupee Idli Patty'; Resilience of Chief Minister Stalin

 

1 முதல் 5ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவ, மாணவியருக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார்.

 

தொண்ணூறுகளின் துவக்கத்தில் கமலாத்தாள் பாட்டி ஒரு இட்லி கடையை துவங்கினார். கடந்த 30 வருடங்களாக கடையை நடத்திக்கொண்டு வரும் இவர் வெகு காலமாக தனது கடையில் இட்லியை ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார். அத்தியாவசியப் பொருட்களின் விலை, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ஜிஎஸ்டி போன்ற விலையேற்றங்கள் பல வந்தாலும் இட்லியை ஒரு ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்து வருகிறார். கமலாத்தாள் பாட்டியின் இட்லிக்கடை இருக்கும் பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இருக்கும் ஏழை, எளிய மக்கள் மிக குறைந்த விலையில் காலை உணவினை அருந்தி தங்களது பணிகளை மேற்கொள்கின்றனர்.

 

இந்நிலையில் அண்ணாவின் பிறந்த நாளான இன்று 1 முதல் 5 ம் வகுப்பு வரை படிக்கும் அரசுப் பள்ளி மாணவ மாணவியருக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

 

1920 களில் ஜஸ்டிஸ் பார்ட்டி சென்னை மாகாணத்தில் பள்ளி மாணவர்களுக்கு உணவு திட்டத்தை துவங்கியது. அதன் பிறகு ஒவ்வொரு கால கட்டத்தில் ஒவ்வொரு தமிழக முதல்வரால் அத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டும் மேம்படுத்தப்பட்டும் வருகிறது. ஜஸ்டிஸ் பார்டியால் 1920களில் துவங்கப்பட்ட மதிய உணவுத்திட்டம் இன்று அதன் நூற்றாண்டு விழாவை எட்டியுள்ளது. அதனை சிறப்பிக்கும் வகையிலும் மேலும் விரிவு படுத்தும் நோக்கிலும் துவக்க நிலை பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரையில்  இன்று துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை துவங்கியது முதல் நடந்த வரலாற்று சம்பவங்களை தொகுத்து தமிழக அரசின் செய்தி தொலைத் தொடர்பு துறையால் புத்தகமாக கொண்டுவரப்பட்ட ஆவண நூல் வெளியிடப்பட்டது. இந்நூலினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட, முதல் பிரதியை கமலாத்தாள் பாட்டி பெற்றுக்கொண்டார். 

 

அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், “ஒடுக்கப்பட்டோர் பிள்ளைகள், ஏழை எளியோர் வீட்டுப் பிள்ளைகள் எதன் காரணமாகவும் பள்ளிக்கு செல்வது தடைபடக் கூடாது என்பதற்காகவே திராவிட இயக்கத்தால் இத்திட்டம் துவங்கப்பட்டது. அன்றுதான் கடந்த நூற்றாண்டின் மாபெரும் இயக்கத்துக்கான விதை தூவப்பட்டது. அதற்காகவே சுயமரியாதை சமூக நீதி கோட்பாடு உருவாக்கப்பட்டது. வகுப்புவாரி இட ஒதுக்கீடு தரப்பட்டது. தகுதியோ சாதியோ கல்விக்கு தடையாக இருக்கக்கூடாது என பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் நினைத்தனர். அவர்கள் நினைத்த திட்டத்தை நான் செயல்படுத்திக் கொண்டு வருகிறேன் என நினைக்கும் பொழுது உள்ளபடியே நான் அளவிட முடியாத மகிழ்ச்சிக்கு ஆளாகிறேன்” என கூறினார்.