Skip to main content

பொன்னமராவதி கலவரம்.. கைது நடவடிக்கை தொடங்கியது!

Published on 31/05/2019 | Edited on 31/05/2019

கடந்த மார்ச் 16 ந் தேதி தஞ்சை மாவட்டத்தில் பரவிய ஒரு ஆடியோ ஒரு சமூகத்தையும் அந்த சமூக பெண்களையும் இழிவாக பேசியதால்புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் அந்த சமூக மக்களின் போராட்டத்தை தூண்டியது. 19 ந் தேதி காவல் நிலையம் முற்றுகை, பேருந்துநிலையம் முற்றுகை அனைத்துச் சாலைகளும் முடக்கப்பட்டது. ஆடியோவில் பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறி போலிசார்  கூட்டத்தை  கலைக்க முயன்றனர். ஆனால் அது கலவரமாகி தடியடி கலவீச்சு நடந்துவிட்டது. இந்த சம்பவத்தில் பல போலிஸ் வாகனங்கள் சேதமடைந்தது போலிசார் மற்றும் பொதுமக்கள் பலர் காயமடைந்தனர். 

 

Ponnaravarathi riots...  Arrest operation begins

 

இந்த சம்பவம் அறிந்து பல கிராமங்களிலும் சாலை மறியல் போராட்டங்கள் தொடங்கயதால் போராட்டத்தைக் கட்டுப்படுத்த 49 வருவாய் கிராமங்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டது.  அதன் பிறகு சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல் என தமிழகத்தின் பல பகுதிகளிலும் அந்த சமூக பெண்களும் இளைஞர்களும் போராட்டங்களை நடத்தினார்கள். 

 


இந்த நிலையில் தான் பொன்னமராவதியில் கலவரத்தில் ஈடுபட்டதாக பிடிக்கப்பட் சிலரை போலிசார் விடுவித்தனர். ஆனால் அப்போதே சுமார் 1000 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். அப்போது குறிபபிட்ட சமுதாய தலைவர்கள் கைது நடவடிக்கை எடுக்க கூடாது என்று பேச்சாவார்த்தை நடத்தினார்கள்.

 

Ponnaravarathi riots...  Arrest operation begins

 

அதன் பிறகு சம்மந்தப்பட்ட ஆடியோவை தேர்தல் ஆதாயத்திற்காக தஞ்சை தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக நிறுத்தப்பட்டவரை வெற்றி பெறச் செய்ய அதே சமூக இளைஞர்களே சிங்கப்பூரில் இருந்து பேசி தஞ்சை மாவட்டத்திற்கு அனுப்பி அங்கிருந்து சமூக வலைதளங்கள் மூலம்  மற்ற பகுதிகளுக்கு பரப்பிவிடப்பட்டதை கண்டறிந்த போலிசார் சம்மந்தப்பட்டவர்களை சிங்கப்பூரில் இருந்து வரவழைத்து கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர். 

 

மேலும் சம்மந்தப்பட்ட ஆடியோவை பரப்பியதாகவும் ஆடியோ வெளியாக காரணமாக இருந்ததாகவும் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு போராட்டங்கள் குறைந்தது. இந்தநிலையில் தான் வியாழக்கிழமை இரவு முதல் பொன்னமராவதில் கலவரத்தில் ஈடுபட்டதாக கூறி ஆலவயல், வார்ப்பட்டு, தேவன்பட்டி, கொல்லுப்பட்டி ஆகிய கிராமங்களில் இருந்து 22 பேரை போலிசார் கைது செய்துள்ளனர். மேலும் கைது நடவடிக்கைகள் தொடர வாய்ப்புகள் உள்ளதால் மீண்டும் பொன்னமராவதி பரபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.