Skip to main content

பொன்னமராவதியில் பணியில் இருந்த பெண் காவலர் ஆடியோ வெளியிட்டு விஷம் குடித்ததால் பரபரப்பு!

Published on 25/04/2019 | Edited on 25/04/2019

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் கடந்த வாரம் நடந்த போராட்டத்தின் போது அங்கு பாதுகாப்பு பணிக்காக சுமார் 800 போலிசார் குவிக்கப்பட்டனர். சில நாட்களில் இயல்பு நிலை திரும்பியுள்ள நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக போலிசாரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

 

ponnamaravathy women police suicide

 

அந்த பாதுகாப்பு பணியில் புதுக்கோட்டை ஆயுதப்படை ஆண் பெண் போலிசாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போது வெளியூர் போலிசார் திரும்பிவிட்ட நிலையில் புதுக்கோட்டை போலிசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். அதில் ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்த நந்தினி (21) என்ற பெண் காவலர் பல நாட்களாக பணியில் இருந்துவிட்டு இன்று மாலை பணி முடிந்த நிலையில் விடுப்பு கேட்டுள்ளார். 

 

 

பணி பதிவு செய்யும் ஒ.எஸ். எழுத்தர் அந்த பெண் காவலருக்கு விடுப்பு கொடுக்க முடியாது என்று மறுபடியும் பணி ஒதுக்க போவதாக சொன்னதால் விரக்தியடைந்த நந்தினி அந்த பணி எழுத்தர் முன்பு நான் ஆர்.ஐ. அலுவலகம் ( புதுக்கோட்டை ஆயுதப்படை பணிக்கு அனுப்பும் அதிகாரி.) முன்பு உள்ள கதவு கிட்ட போய் (விஷம்) குடிப்பேன் என்று 11 வினாடிகள் ஓடும் ஆடியோ பதிவு செய்து தனது நண்பர்களுக்கு அனுப்பிவிட்டு பூச்சி மருந்து குடித்துள்ளார். 

 

காவலர்கள் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்து சேர்த்துள்ளனர். அதன் பிறகு அந்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

பணிச்சுமையை குறைக்க விடுப்பு கொடுக்காத்தால் பெண் காவலர் விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலிஸ் உயர் அதிகாரிகளும் புதுக்கோட்டையில் முகாமிட்டுள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மயக்க ஊசி போட்டு மருத்துவ மாணவி தற்கொலை; போலீசிடம் சிக்கிய உருக்கமான கடிதம்

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

Medical student incident; letter caught by the police

 

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள வெஞ்ஞாரமூடு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் அசீஸ். இவரது மகள் ஷஹ்னா (28) எம்.பி.பி.எஸ் படிப்பு முடித்துள்ளார். இதனையடுத்து, இவர் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சைப் பிரிவில் முதுகலை படித்து வந்தார். மேலும், ஷஹ்னா தன்னுடன் படிக்கும் சக மாணவிகளுடன் மருத்துவக் கல்லூரி அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி படித்து வந்தார். 

 

இதற்கிடையே, ஷஹ்னாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று முன் தினம் (05-12-23) ஷஹ்னாவுக்கு மருத்துவமனையில் இரவு பணி இருந்தது. ஆனால், அவர் பணிக்கு செல்லாமல் அறைக்குள்ளே தங்கியிருந்தார். இதனால், சந்தேகமடைந்த சக மாணவிகள் அவரது அறைக்கு சென்று பார்த்தபோது, கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. மேலும், அவர்கள் நீண்ட நேரம் கதவை தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. அதனால், கதவை உடைத்து திறந்து பார்த்துள்ளனர். அங்கு ஷஹ்னா மயங்கிய நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவிகள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். 

 

அங்கு, அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடலை மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்துள்ளனர். அப்போது, ஷஹ்னா நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சையின் போது செலுத்தும் மயக்க ஊசியை தானே போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இந்த தகவலை அறிந்த போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

 

அந்த விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட மருத்துவர் ஷஹ்னா, தன்னுடன் படித்து வந்த ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்களுக்குள் திருமணம் நடத்த காதலன் வீட்டில் சம்மதித்துள்ளனர். ஆனால், வரதட்சணையாக 150 பவுன் நகை, 15 ஏக்கர் நிலம், பிஎம்டபிள்யூ கார் ஆகியவை வேண்டும் என்று காதலன் வீட்டில் கட்டாயப்படுத்தியுள்ளனர். இந்த வரதட்சணையை கொடுக்க முடியாததால் மனமுடைந்து போன ஷஹ்னா தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று போலீசாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து, ஷஹ்னா தங்கியிருந்த அறையை போலீசார் தீவிர சோதனை நடத்தினர். 

 

அந்த சோதனையில், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ஷஹ்னா தன் கைப்பட எழுதிய கடிதத்தை போலீசார் மீட்டனர். அந்த கடிதத்தில், ‘இந்த உலகத்தில் அன்பிற்கு எந்த மரியாதையும் கிடையாது. எனது அப்பா போய்விட்டார். திருமணத்திற்கு வரதட்சணையாக கூடை கூடையாக பணம் கொடுக்க எனக்கு யாரும் இல்லை. எல்லோருக்கும் பணம் மட்டும் தான் வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, அந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

 

 

Next Story

ஐசியூவில் தாய்; பசியால் துடித்த குழந்தைக்கு பாலூட்டிய பெண் காவலர்

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

Mother in ICU; A female guard nursed a starving child

 

மருத்துவமனையில் ஐசிஐ பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த வடமாநில பெண்ணின் குழந்தைக்கு பெண் காவலர் ஒருவர் பாலூட்டிய சம்பவம் நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.

 

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், வடமாநிலத்தை சேர்ந்த அப்பெண்ணின் நான்கு குழந்தைகளும் வெளியில் தவித்துக் கொண்டிருந்தனர். பராமரிக்க யாரும் இல்லாததால் போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

 

உடனடியாக அங்கு வந்த எர்ணாகுளம் நகர காவல்துறையைச் சேர்ந்த பெண் போலீசார் குழந்தைகளை தங்கள் பொறுப்பில் பார்த்துக் கொண்டனர். அந்த நான்கு குழந்தைகளில் ஒரு குழந்தை நான்கு மாத குழந்தையாகும். மற்ற மூன்று குழந்தைகளுக்கு பெண் போலீசார் உணவு வாங்கி வந்து கொடுத்தனர். ஆனால் நான்கு மாத குழந்தைக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர். அப்பொழுது அதே காவலர் குழுவில் இருந்த ஆர்யா என்ற பெண் காவலர் அழுது கொண்டிருந்த நான்கு மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தார். இதனை காவல் ஆய்வாளர் ஆனி என்பவர் முகப்புத்தகத்தில் பதிவிட்டார். பெண் காவலரின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். பெண் காவலர் ஆர்யாவிற்கு ஒன்பது மாத குழந்தை உள்ளது. இந்நிலையில், பணிக்காக வந்த இடத்தில் வடமாநில பெண்ணின் குழந்தைக்கு பாலூட்டி பராமரித்த அவரது செயல் பல தரப்பிலிருந்து பாராட்டுகளை பெற்று வருகிறது.