Skip to main content

பெண்களை இழிவாக பேசிய ஆடியோ விவகாரம்.. வதந்தி பரப்பியவர் கைது!

Published on 23/04/2019 | Edited on 23/04/2019

கடந்த 16 ந் தேதி தமிழ்நாடு முழுவதும் கடைசி கட்ட பரப்புரையில் வேட்பாளர்கள் தீவிரமாக இருந்த நிலையில் அதைவிட பரபரப்பாக தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதி வட்டார மொழியில் பேசிய ஒரு ஆடியோ வெளிவந்தது.
 

ponnamaravathi



அந்த ஆடியோ உரையாடல் தமிழ்நாடு முழுவதும் போராட்டங்களை தூண்டிவிட்டுள்ளது.
 

இந்த ஆடியோவால் தஞ்சை தொகுதி பொட்டலங்குடிக்காடு மக்கள் தேர்தலை புறக்கணித்தனர், பிறகு சமாதானம் செய்யப்பட்ட பிறகு வாக்களித்தனர். அன்று இரவு புதுக்கோட்டை மாவட்டம்,  பொன்னமராவதியில் காவல் நிலையம் முற்றுகையில் தொடங்கி, 19ந் தேதி தடியடி கல்வீச்சு என்று நகர, சுற்றியுள்ள 49 கிராமங்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டதால், அந்த பகுதியில் போராட்டம் குறைந்தாலும் மற்ற பகுதிகளில் போராட்டம் வெடித்தது. பெண்கள் துடைப்பத்துடன் போராடச் சென்றனர்.
 

இந்த நிலையில் வாட்ஸ் அப் ஆடியோவை வெளியிட்ட நபரை பிடிக்க கலிஃபோர்னியாவில் உள்ள வாட்ஸ் அப் நிறுவனத்தின் உதவியை புதுக்கோட்டை போலிசார் நாடியுள்ளனர். இந்த நிலையில்தான் சமூகவலைதளங்களில் ஒரு குறிப்பிட்ட நபரின் படத்துடன் வெளியான பதிவில் படத்தில் உள்ளவர்தான் பெண்களை இழிவாக பேசிய ஆடியோ வெளியிட்ட நபர் என்றும், அவர் கைது செய்யப்படும் வரை பகிருங்கள் என்றும் அந்த பதிவு இருந்தது. இந்த பதிவும் வேகமாக பரவியதால் அந்த படத்தில் இருந்த தஞ்சை மாவட்டம், திருச்சிற்றம்பலம் மேற்கு கிராமத்தைச் சேர்ந்த நடேசன் மகன் அய்யாச்சாமி.. 
 

என் படத்துடன் தவறான பதிவை பரப்பி வருகிறார்கள், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் வதந்தி பரப்புவதாக கொத்தமங்கலம் செல்வராஜ் மகன் குகன் மற்றும் மற்றொரு நபர் மாரிமுத்து என்றும் பெயர்களையும் குறிப்பிட்டிருந்தார். 


அந்த புகாரின் அடிப்படையில் கொத்தமங்கலம் குகனை திருச்சிற்றம்பலம் போலிசார் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். தொடர்ந்து புதுக்கோட்டை ஏடிஎஸ்பி இளங்கோவன், பட்டுக்கோட்டை டிஎஸ்பி கணேசமூர்த்தி ஆகியோர் விசாரணை செய்தனர். 2 நாட்கள் நடந்த விசாரணைக்கு பிறகு சமூக வலைதளத்தில் வதந்தி பரப்பினார் என்று கைது செய்துள்ளனர்.


மேலும் இதே போல பலரும் தவறான பதிவுகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். அதாவது... போராட்டத்திலுள்ள குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களே ஆடியோ வெளியிட்டதாகவும், அந்த வதந்திகள் பரவுவதால் அந்த தகவலை பரப்பும் நபர்களையும் பிடித்து விசாரணை செய்தால்தான் வீண் வதந்திகள் பரவாமல் தடுக்க முடியும் என்று சொல்லும் போலிசார் அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அதே தவறான பதிவுகளை போலிசாரும் பகிர்வதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.