பொன்னமராவதி ஆடியோ விவகாரத்தில் அடுத்தடுத்து வெளிவரும் பதிவுகளால் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/whatsapp.jpg)
ஒரு சமுதாய பெண்களை இழிவாக பேசியதாக ஆடியோ வெளியான சம்பவத்தில் பொன்னமராவதியில் தொடங்கி தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் பரவியுள்ள போராட்டத்தின் மத்தியில் அதே சமூக நபர்களே ஆடியோ வெளியிட்டதாக பரப்பப்படும் பதிவுகளால் மேலும் பரபரப்பும், பதற்றமும் எற்பட்டுள்ளது.
கடந்த 16 ந் தேதி சமூக வலைதளங்களில் பரவிய ஒரு ஆடியோவில் தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதி சுயேட்சை வேட்பாளர் செல்வராஜ் மற்றும் அவர் சார்ந்துள்ள சமூக பெண்களை இழிவாக பேசிக் கொள்வதான உரையாடல் வெளியானது. அந்த குரல் பதிவு குறித்து தஞ்சாவூர் சுயேட்சை வேட்பாளர் செல்வராஜ் 17 ந் தேதி தஞ்சாவூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகார் கொடுத்ததாக கூறப்படுகிறது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்த நிலையில் 18 ந் தேதி பொன்னமராவதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததுடன் இரவில் காவல் நிலையம் முற்றுகை மறு நாள் பேருந்து நிலையம் முற்றுகை மற்றும் தடியடி, கல்வீச்சு சம்பவங்களும் நடந்ததால் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. அதன் பிறகு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.
போலிசார் சம்மந்தப்பட்ட ஆடியோ எங்கிருந்து பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய வாட்ஸ் அப் நிறுவனத்தின் உதவியை நாடியுள்ளனர். மேலும், சம்மந்தப்பட்ட ஆடியோ பதிவுகளை பகிர்வதால் மேலும் பிரச்சனைகள் எற்படுவதால் பகிர்ந்த சிலரை பிடித்து விசாரனை செய்து வருகின்றனர். இந்த அடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் சிலரிடம் விசாரனை நடத்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு சில நபர்கள் தான் குரல் பதிவு செய்தது என்று சமூக வலைதளங்களில் படங்களுடன் பதிவிட்டவர்கள் மீது திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கீரமங்கலம் பகுதியில் உள்ள சில இளைஞர்களிடம் போலிசார் விசாரனை செய்தனர்.
இந்த நிலையில் பட்டுக்கோட்டை மற்றும் திருச்சிற்றம்பலம் பகுதியில் போலிசார் விசாரனை செய்த நபர்கள் தான் குறிப்பிட்ட ஆடியோ பதிவுகளை வெளியிட்டவர்கள் என்றும், அவர்களும் அதே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று யாரோ சிலரது படங்களையும் இணைத்து சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். அதனால் அந்த பதிவுகளும் வேகமாக பரவி வருவதால் இது குறித்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கோபமடைந்துள்ளனர். மேலும் இது போன்ற தவறான பதிவுகளை பகிரும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் போராட்டம் நடத்தும் மக்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)