Skip to main content

ஜெயிக்கப் போவது பொன்முடியா? கே.என். நேருவா?

Published on 10/03/2019 | Edited on 10/03/2019

 

திமுக கூட்டணியில் பாரிவேந்தர் கட்சிக்கு கள்ளக்குறிச்சி தொகுதி ஒதுக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாக சொல்லப்பட்ட நிலையில் முன்னாள் அமைச்சரும் விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளருமான பொன்முடி தனது மகன் கௌதம சிகாமணியை கள்ளக்குறிச்சி தொகுதியில் நிறுத்த தீவிர முயற்சி எடுத்து வந்ததும், விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் பல்வேறு ஒன்றிய செயலாளர்களை தனிப்பட்ட முறையில் பார்த்து தன் மகனுக்கு ஆதரவு திரட்ட முயற்சித்து வருகிறார். இதற்கு இடையில் பொன்முடி மகன் கள்ளக்குறிச்சியில் போட்டியிடுகிறார் என விளம்பரங்களும் வெளிவர துவங்கியுள்ள நிலையில் இதற்கு வலு சேர்க்கும் விதமாக சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள துரைமுருகன் இல்லத்திற்கு பொன்முடி தனது மகன் கவுதம சிகாமணியுடன் சந்தித்து உற்சாகமாகப்பேசிய திமுக பொருளாளர், பொன்முடியின் கைகளைப் பிடித்தபடி ‘என் மகனும், உன் மகனும் எம்.பியாக போவது உறுதி என நம்பிக்கையாக கூறியுள்ளார். 

 

k

 

இப்படி பொன்முடி தன் மகனுக்காக பாரிவேந்தரை பெரம்பலூருக்கு தள்ளிவிட நினைக்கும் நிலையில் கே.என்.நேருவோ பெரம்பலூர் தொகுதியோ திருச்சியில் உள்ள லால்குடி, குளித்தலை, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் பெரம்பலூர் என திருச்சியில் உள்ள பாதி சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. ஏற்கனவே நடிகர் நெப்போலியன் நின்று அதிக ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்த தொகுதி. இந்த முறையும் அதே போலதி.மு.க.விற்கு கொடுத்தால் கட்டாயம் ஜெயித்து விடலாம் என ஜெயிக்கிற கணக்கை சொல்லியிருக்கிறார். 

 

பாரிவேந்தர் கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் என இரண்டில் ஒரு தொகுதி கேட்கப்பட்ட நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ரவி, “எங்களுக்கு விருப்பமான தொகுதி கள்ளக்குறிச்சிதான் அதைக் கேட்டிருக்கிறோம். விரைவில் முடிவு செய்வோம் என்று சொல்லியிருந்தார்.

 

இந்நிலையில், பாரிவேந்தர் கட்சிக்கு கள்ளக்குறிச்சி தொகுதி ஒதுக்கப்படுவது உறுதியாகிவிட்டது. இதனைத் தொடர்ந்து இரவோடு இரவாக தேர்தல் பிரச்சாரத்தில் குதித்துள்ளனர் பாரிவேந்தரின் ஆதரவாளர்கள் மற்றும் திமுகவினர். இதற்காக போஸ்டர், பேனர் என அனைத்து வேலைகளையும் ஆரம்பித்துள்ளனர்.

 

p

 

கடந்த முறை பெரம்பலூரில் கோடிக்கணக்கில் செலவு செய்து அதிமுக மருதை ராஜிடம் தோற்றதால், இந்த முறை திமுக வாக்கு வங்கியோடு, கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது என முடிவு செய்து தொகுதி முழுவதும் பாரிவேந்தர் வேலையில் இறங்கினார். ஸ்டாலினிடம் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் அவர்களை எதிர்த்து நாங்கள் முழுபலத்துடன் பண பலம், ஆட்கள் பலத்தை இறக்குகிறேன் என உறுதி கொடுத்ததால் ஸ்டாலினும் பாரிவேந்தருக்கு ஓகே சொல்லி இருப்பதாக தகவல்.

 

அதே நேரத்தில் பொன்முடி தன் மகனுக்காக தலைமைக்கு நெருக்கடி கொடுத்து கள்ளக்குறிச்சியை வாங்கினால் பெரம்பலூர் பாரிவேந்தருக்கு கிடைத்தால் திருச்சியில் தி.மு.க. போட்டியிட வேண்டும் என்று தி.மு.க. கட்சி தலைமை நெருக்கடி கொடுக்கிறது.  ஆனால் கே.என்.நேரு தரப்போ ஏற்கனவே திருச்சியில் கடந்த முறை தி.மு.க. போட்டியிட்ட மாநகர செயலாளர் அன்பழகன் செலவுக்கு பணம் இல்லாமல் தற்போது கடனாளியானார். மீண்டும் இந்த முறையும் அவருக்கு வாய்ப்பு கொடுக்க முடியாது என்றும், அதுவும் இல்லாமல் தாராளமாக பணம் செலவு பண்ணக்கூடிய தி.மு.க. வேட்பாளர் இல்லை என்பதாலும், இந்த தொகுதியில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற காங்கிரசுக்கு தொகுதியை ஒதுக்கி கொடுங்கள். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் எம்.பியுமான அடைக்கலராஜ் மகன் லூயிஸ் அடைக்கலராஜ்க்கு கொடுத்தால் பணம், செல்வாக்கு தாராளமாக இருப்பதால் ஈசியா ஜெயித்து விடலாம் என தலைமைக்கு தகவல் சொல்லியிருக்கிறார். 

 

பொன்முடி தன் மகன் நிற்க வேண்டும் என்பதற்காக பாரிவேந்தரை பெரம்பலூருக்கு தள்ளிவிடவும், கட்டாயம் திருச்சி தி.மு.க. விற்காக தள்ளிவிட தலைமை முயற்சிப்பது தான் தற்போது அரசியலில் பரபரப்பாக இருக்கிறது. 

 

ஜெயிக்கப் போவது பொன்முடியா ? கே.என். நேருவா? என்கிற விவாதம் கட்சியின் மேல் மட்டங்களில் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“சர்.பிட்டி தியாகராயர் காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி” - தமிழக முதல்வர் புகழாரம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Chief Minister of Tamil Nadu felicitated for Pioneer of Sir Pitti Thiagarayar Breakfast Scheme

திராவிடக் கட்சியின் தாய் அமைப்பான நீதிக்கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் சர்.பிட்டி தியாகராயர். இந்திய சுதந்திரத்துக்கு பிறகு, முன்னாள் முதல்வர் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை தொடங்குவதற்கு முன்பே, அந்த திட்டத்தை சென்னை மாநகராட்சி பள்ளிகளில், சர்.பிட்டி தியாகராயர் தொடங்கி வைத்து முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார். இவரது நினைவாக தான் சென்னை தியாகராயர் நகர் (தி.நகர்) பகுதிக்கு இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்று (27-04-24) சர்.பிட்டி தியாகராயரின் 173ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 

சர்.பிட்டி தியாகராயரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்! அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வினால் சென்னையின் கல்வி, மருத்துவ வளர்ச்சிக்குத் தூணாக விளங்கிய மக்கள் தொண்டர்!

காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி!. தேடி வந்த பதவியை மறுத்த மாண்பாளர், நம் வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் பிறந்தநாளில் அவரது வாழ்வையும் பணியையும் போற்றி வணங்குகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க பணம் பட்டுவாடா; கையும் களவுமாக சிக்கிய நபர்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
election flying squad caught the person who paid money to vote for the bjp

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி(நாளை) தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.  இதனையொட்டி வாக்குப் பதிவுக்கான பணிகள் மாநிம் முழுவதும் அதிதீவிரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் தாமரை சின்னத்திற்காக வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த நபரை தேர்தல் படக்கும் படையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர். பெரம்பலூர் தொகுதியில் ஐ.ஜே.கே தலைவர் பாரிவேந்தர் பாஜக கூட்டணியில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்த நிலையில்தான் குளித்தலை அருகே உள்ள ராஜேந்திரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி  ஐஜேகே சார்பில் போட்டியிடும் பெரம்பலூர் நாடாளுமன்ற வேட்பாளர் பாரிவேந்தருக்கு தாமரை சின்னத்தில்  வாக்களிக்க வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன்பேரில், தேர்தல் பறக்கும்படை  நிலையான குழுவினர் அங்கு சென்றபோது அங்கு வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்த திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா அழகரையை சேர்ந்த அஜித் என்பவரிடமிருந்து ரூபாய் 60 ஆயிரம் பறிமுதல் செய்தனர். பின்னர்  பறக்கும் படையினர் அவரை குளித்தலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூபாய் 60 ஆயிரத்தை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தனலட்சுமி இடம் ஒப்படைத்தனர்.