Advertisment

"பொங்கல் பரிசாக ரூபாய் 2,500 வழங்கப்படும்"- தமிழக முதல்வர் அறிவிப்பு!

pongal gift announced cm palanisamy at salem district

பொங்கலையொட்டி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2,500 வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்துள்ளார்.

Advertisment

சேலம் மாவட்டம், இருப்பாளியில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி , "தமிழகம் முழுவதும் 2 கோடியே 6 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2,500 வழங்கப்படும். 2021- ஆம் ஆண்டு ஜனவரி 4- ஆம் தேதி முதல் ரூபாய் 2,500 திட்டம் அமல்படுத்தப்படும். துண்டு கரும்புக்கு பதிலாக முழு கரும்பு வழங்கப்படும். ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, திராட்சை, முழு கரும்பு உள்ளிட்டவை கொண்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். ஜனவரி 4- ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணித் துவங்கும்"என தெரிவித்தார்.

Advertisment

இதுவரை குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூபாய் 1,000 வழங்கி வந்த நிலையில் ரூபாய் 2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

cm edappadi palanisamy tn govt pongal gift
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe