Skip to main content

சமத்துவப் பொங்கல் விழா; தமிழி எழுத்தில் வாழ்த்துக் கோலம் போட்டு அசத்திய மாணவிகள்

 

Pongal festival greeting card  Tamizhi words written students

 

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் இ. சண்முகநாதன் தலைமை தாங்கினார். வகுப்பறைகளை சுத்தம் செய்து பள்ளி முழுவதும் அலங்கரிக்கப்பட்டு அனைத்து வகுப்புகள் முன்பும் கோலங்கள் போடப்பட்டன.

 

பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றம் மூலம் பழமையான தமிழி எழுத்துகளை எழுதப் படிக்கத் தெரிந்துள்ள எட்டாம் வகுப்பு மாணவிகள் தீபிகாஸ்ரீ, பார்னியாஸ்ரீ, வித்யா ஆகியோர் தலைமையிலான குழுவினர், வகுப்புக்கு முன்பு பொங்கல் பானை, கரும்பு கோலத்துடன் பழமையான தமிழி மற்றும் தமிழ் எழுத்துக்களில் 'இனிய பொங்கல் வாழ்த்து' என எழுதியிருந்தது அனைவரையும் கவர்ந்தது.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !