Skip to main content

1000 ரூபாய் பொங்கல் பணத்தில் ஓட்டு  கேன்வாஸ்!

Published on 08/01/2019 | Edited on 08/01/2019

 

to


தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாயும் பொங்கல் பொருட்களும் வழங்கப்படும் என எடப்பாடி அரசு அறிவித்துள்ளது.   அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில்  வழங்கப்பட்டு வருகிறது. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்  கொள்ளும் விதமாக அதிமுக நிர்வாகிகள் ரேஷன் கடை முன்பு நின்று கொண்டு அலப்பறை கொடுத்து வருகின்றனர்.   இதில்  சில முன்னாள் அதிமுக கவுன்சிலர்கள் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் பில்டப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

 

t3


 திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் உள்ள பல ரேஷன் கடைகளில் ஆளும் கட்சியினர் நின்று ரேஷன் கார்டு ஜெராக்ஸ்சை வாங்கி பணம் வாங்கி கொடுத்து விட்டு எம்.பி.தேர்தலுக்காக தான் முதல்வரும்‌, துணைமுதல்வரும் அட்வான்ஸ்சாக ஆயிரம் ரூபாயை பொங்கல் பரிசாக கொடுத்து இருக்கிறார்கள்.  இதை எல்லாம் மனதில் வைத்து எம்பி தேர்தலில் எங்களுக்கு வாக்களிக்க மறக்காதீர்கள்.  

 

t4

 

தேர்தல் சமயத்தில் இதைவிட பலமடங்கு உங்களுக்கு பணம் கொடுக்க இருக்கிறோம் என்று கூறி ரேஷன் கடைக்கு வரும் மக்களை ஆளும் கட்சியினர் இப்போது தேர்தலுக்காக கவர் செய்து வருகிறார்கள்.  இது போல் வத்தலகுண்டு காந்திநகர்  முன்னாள் கவுன்சிலர் நாகூர்கனி தனது ஆதரவாளர்களுடன் சென்று  பொதுமக்களை ஒழுங்குபடுத்துவதும் தனக்கு வேண்டியவர்களுக்கு உடனடியாக பணம் வாங்கித் தருவதும்,  சந்தடி சாக்கில் வரும் தேர்தலில் தனக்கு வாக்களிக்க வேண்டுமென ஓட்டு  கேட்பது என அலப்பறை கொடுத்து வருகிறார். இதை கண்ட பொதுமக்கள் அரசாங்க பணத்தை எடுத்துக்கொண்டு அதிமுகவினர் தங்களுக்கு ஓட்டு கேட்பதா என  முனு முனுத்தும் வருகிறார்கள். இருந்தாலும் மாவட்ட அளவில் அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆளுங்கட்சியினர் நின்றுகொண்டு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வாங்க வரும் பொதுமக்களிடம் எங்களை மறந்து விடாதீர்கள் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி இப்பொழுதே தேர்தலுக்காக அடிபோட்டு வருவதையும் பார்க்க முடிந்தது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்; ரூ.36 லட்சம் அபராதம் வசூல்

Published on 22/01/2024 | Edited on 22/01/2024
Surcharge on omni buses; A fine of Rs.36 lakh was collected
கோப்புப்படம்

பொங்கல் விடுமுறை நாட்களில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து தமிழகம் முழுவதும் ஜனவரி 10 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை சிறப்புக் குழுக்கள் மூலம் தமிழக போக்குவரத்து சார்பில் சோதனை நடத்தப்பட்டது. அதன்படி 15 ஆயிரத்து 650 ஆம்னி பேருந்துகளில் சோதனை செய்யப்பட்டதில் ஆயிரத்து 892 ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பயணிகளிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலித்த ஆயிரத்து 892 ஆம்னி பேருந்துகளிடம் இருந்து ரூ.36.55 லட்சம் தமிழக போக்குவரத்து சார்பில் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதற்கான தகவலை தமிழக போக்குவரத்துத்துறையின் சாலை பாதுகாப்பு ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் விதிமுறைக்கு புறம்பாக தமிழகத்தில் இயங்கும் ஆம்னி பேருந்துகளை வரை முறைப்படுத்த மார்ச் 31 ஆம் தேதி வரை காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது.

நாகலாந்து மற்றும் அருணாச்சல பிரதேசங்களில் பதிவு செய்து தமிழகத்தில் சுமார் ஆயிரம் பேருந்துகள் இயங்குகின்றன. இது போன்று பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட பேருந்துகள் அந்தந்த மாநிலங்களில் தடையில்லா சான்று பெற்று மார்ச் 31 ஆம் தேதிக்குள் மறுபதிவு செய்து உரிமம் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் பிற மாநிலத்தில் பதிவு செய்த ஆம்னி பேருந்துகள் தமிழகத்தில் இயங்க அனுமதி இல்லை எனவும் சாலை பாதுகாப்பு ஆணையர் தெரிவித்துள்ளார். 

Next Story

'காளையா காளையர்களா? நீயா நானா?'- நடிகர் சூரி பேட்டி

Published on 17/01/2024 | Edited on 17/01/2024
'Bulls or youngsters? Are you me?'-actor Soori interviewed

இன்று (17-01-24) அலங்காநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 1200 காளைகள், 700 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று இருக்கின்றனர்.

தற்போது வரை எட்டு சுற்றுகள் நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் சிறந்த காளைக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் 2 கார்கள் வழங்கப்பட உள்ளன. மேலும், பைக், தங்கம், வெள்ளி காசு், டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், சைக்கிள், அண்டா, பீரோ, கட்டில் போன்ற பரிசுகளும் வழங்கப்படும். மேலும், பாதுகாப்பிற்காக தென்மண்டல ஐஜி தலைமையில் 2,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த நடிகர் சூரி செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''இன்று உலகத்திலேயே முக்கியமான நிகழ்வுகளில் இந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டும் புகழ்பெற்றது. அதேபோல நமது உறவுகளால், நம் தமிழ், நம் பாரம்பரியத்தை, நம் கலாச்சாரத்தை காப்பாற்றும் ஒரே வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு.

காளையா காளையர்களா? நீயா நானா? அப்படி ஒரு வீர விளையாட்டு தான் ஜல்லிக்கட்டு. அதைத்தான் பார்க்க வந்தேன். போன வருடமும் வந்தேன். போன வருடமும் ஜல்லிக்கட்டில் என்னுடைய மாடு வந்தது. இந்த வருடமும் என்னுடைய மாடு வந்தது. தொடர்ந்து வந்து கொண்டே இருப்பேன். என்னுடைய மாடு இங்கே தொடர்ந்து அவிழ்த்து விடப்படும்'' என்றார்.