புதுச்சேரி ஜெயராம் நகர் பகுதியை சேர்ந்தவர் கீதா (30). கணவர் ராஜி. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கீதா, கணவரை பிரிந்து பிள்ளைகளுடன் தனியாக வாழ்ந்து வருகின்றார். இந்நிலையில் கருவடிக்குப்பத்தை சேர்ந்த ஆனந்த் என்பவருடன் கீதாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
நீண்ட நாட்கள் தொடர்பில் இருந்த இவர்களுக்குள் சமீப காலமாக பிரச்சனை எழுந்துள்ளது. இன்று ஜெயராம் நகரில் உள்ள கீதாவின் வீட்டிற்கு வந்த ஆனந்த் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு கீதாவை கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.
சுதாரித்து கொண்டு வீட்டின் வெளியே ஓடி வந்த கீதாவை பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து ஆனந்த் தப்பியோடிவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த தன்வந்திரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்ய அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலைக்காண காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தவறான தொடர்பால் இந்த கொலை நடந்துள்ளது என தெரியவந்துள்ளது. தப்பியோடிய கருவடிக்குப்பத்தை சேர்ந்த சின்னமூஞ்சி ஆனந்த் (எ) ஆனந்த் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் கொலை நடந்துள்ளதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.