Skip to main content

 காதலிப்பதாக கூறி பள்ளி மாணவியை நண்பர்களுடன் பலாத்காரம் செய்த இளைஞர் கைது! 

Published on 07/04/2019 | Edited on 07/04/2019

 


புதுச்சேரி அருகேயுள்ள தமிழகப்பகுதியான ஆரோவில்  அடுத்துள்ள நாவற்குளம் பகுதியில்  வசிக்கும் 15 வயது சிறுமி.  ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி  தன்னுடைய காதலன் நாவற்குளம் நரேஷ் (19)  கூறிய ஆசை வார்த்தைகளை நம்பி  சேதராப்பட்டு பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு சென்றார்.

 

q

 

அங்கு அந்த மாணவிக்கு அவரது காதலன் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்தான். தொடர்ந்து அவனது நண்பர்களான வானூர் விநாயகபுரத்தைச் சேர்ந்த ராஜா என்கிற ராக்கெட் ராஜா  (32 ) என்பவன் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். அவனைத் தொடர்ந்து மொரட்டாண்டியைச் சேர்ந்த சூரியா ( 19) என்பவனும் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

 

இந்நிலையில்  மாணவி மாயமானதை அடுத்து ஆரோவில் காவல் நிலையத்தில் மாணவியின் தாயார் புகார் கொடுத்திருந்தார்.   நேற்று இரவு அந்த மாணவி தன்னுடைய வீட்டிற்கு நடந்து வந்தார்.  சுயநினைவற்ற நிலையில் இருந்த அந்த மாணவியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.  அங்கு ஆரோவில் போலீசார் நடத்திய விசாரணையில் மூன்று காமக்கொடூரன்கள் இந்த மாணவியை பாலியல் வன்புணர்ச்சி செய்தது தெரியவந்தது. 

 

தனிப்படை அமைத்து ஊரை விட்டு தப்பியோட முயன்ற 3 பேரையும் சுற்றி வளைத்து பிடித்து போக்சோ உள்ளிட்ட பல்வேறு கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கடலூர் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.
 

சார்ந்த செய்திகள்