Advertisment

 9 வயது சிறுமியிடம் அத்து மீறல்! மின் துறை ஊழியர் சிறையிலடைப்பு!

புதுச்சேரி அபிஷேகப்பாக்கத்தை சார்ந்த வினோத் (26) என்பவர் மின்துறையில் ஊழியராக பணி புரிந்து வருகின்றார்.

Advertisment

மின்துறையில் மின்சார கட்டண ரீடிங் எடுக்கும் பணியை செய்து வரும் இவர் நேற்று பாகூர் பகுதியில் உள்ள சேலியமேடு என்ற கிராமத்தில் உள்ள வீடுகளில் ரீடிங் எடுக்கும் பணியை மேற்கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் தனியாக இருந்த 9 வயது சிறுமியிடம் குடிக்க தண்ணீர் கேட்டு வீட்டிற்குள் சென்ற அவர் அந்த சிறுமியிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டுள்ளார்.

p

வினோத் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்ததை அடுத்து சிறுமி கூச்சலிட்டதால் அருகில் உள்ள வீட்டில் இருந்தவர்கள் வந்ததையடுத்து மின்துறை ஊழியர் தப்பித்து ஓடி விட்டார்.

Advertisment

இச்சம்பவம் குறித்து அவரது அருகில் இருந்தவர்கள் சிறுமியின் பெற்றோர்களுக்கு தெரிவித்ததை அடுத்து சிறுமியின் பெற்றோர்கள் அருகிலுள்ள பாகூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதையடுத்து பாகூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, மின்துறை ஊழியரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பட்ட பகலில் மின் துறை ஊழியர் ஒருவர் சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Pondicherry
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe