Advertisment

புதுச்சேரியில் ஆகஸ்ட் 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - அமைச்சர் கந்தசாமி அறிவிப்பு

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக புதுச்சேரி சுற்றுச்சூழல் அமைச்சர் கந்தசாமி, ‘தமிழகத்தை போன்று புதுச்சேரியிலும் பிளாஸ்டிக் பைகள் உட்பட 14 பொருட்களை தடை செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார். இதற்கு வணிகர்கள், சிறு வியாபாரிகள் சில கோரிக்கைகள் வைத்ததால் இதுவரை தடை செய்யப்பட வில்லை.

Advertisment

இந்நிலையில் அதிகாரிகள், வணிக நிறுவனத்தில் உள்ளவர்கள், தொழிற்சாலை உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இதில் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமையை கருத்தில் கொண்டு 50 மைக்ரானுக்கு கீழ் உள்ள பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என்று அமைச்சர் கந்தசாமி அறிவித்துள்ளார்.

Advertisment

மேலும் சட்டப்பேரவை கூட்டி எந்த எந்த பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

k

Pondicherry
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe