Skip to main content

 சாசன் மருந்து தொழிற்சாலையை கண்டித்து தொழிற்சங்கத்தினர் தர்ணா!  

Published on 13/08/2019 | Edited on 13/08/2019


 
புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டில் உள்ளது சாசன் தனியார் மருந்து தொழிற்சாலை.  இங்கு 400-க்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்களும்,  நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களும்  பணியாற்றி வருகின்றனர்.

 

 இந்த தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பல்வேறு தோல் நோய்கள் ஏற்படுகின்றன.  மேலும் பல தொழிலாளர்களை திடீர் திடீரென வேலையை விட்டு நிறுத்துகின்றனர்.

 

l

 

இவற்றை கண்டித்தும், மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்தும் தொழிற்சங்கத்தினர் நிர்வாகத்திடம் பேசுவதற்காக பலமுறை முயற்சி செய்தனர்.  ஆனால் தொழிற் சங்கத்தினரை நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை.  இதனால் கோரிக்கை மனு கொடுக்க தொழிற்சாலைக்கு சென்ற தொழிற்சங்கத்தினரையும்,   தொழிலாளர் களையும் உள்ளே அனுமதிக்கவில்லை.  

 

l


இதனால் ஆவேசமடைந்த தொழிற்சங்கத்தினர் மற்றும் தொழிலாளர்கள் முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம் தலைமையில் தொழிற்சாலை முன்பாக சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் போராட்டகாரர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் தொழிற்சாலை நிர்வாகம் தொழிற்சங்கத்தினரிடையே பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை. 

l

 

அதையடுத்து தொழிற்சங்கத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இன்று புதுச்சேரி மாநில தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தின் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல்; கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

Published on 30/07/2023 | Edited on 30/07/2023

 

child issue court judgement for labourer

 

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.

 

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சந்திரபிள்ளைவலசு பகுதியைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (வயது 31). கூலித்தொழிலாளியான இவர், கடந்த 2014 ஆம் ஆண்டு, அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த 6 ஆம் வகுப்பு மாணவனை கழிப்பறைக்கு அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார். மேலும் அந்தச் சிறுவனை பலமுறை மிரட்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.

 

இதையறிந்த பள்ளி ஆசிரியர்கள், மாணவனின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் வாழப்பாடி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் காவல்துறையினர் ஹரிகிருஷ்ணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி, சிறுவனிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட ஹரிகிருஷ்ணனுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஜூலை 28 ஆம் தேதி தீர்ப்பு அளித்தார். மேலும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. 

 

 

Next Story

வடமாநிலத் தொழிலாளர் மர்ம மரணம்; போலீசார் தீவிர விசாரணை

Published on 23/05/2023 | Edited on 23/05/2023

 

erode north indian labour incident police investigation started

 

ஈரோடு மாவட்டம் தாசில்தார் தோட்டத்தில் முரளிதரன் என்பவருக்குச் சொந்தமான சலவைப் பட்டறை செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான வடமாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இதே வளாகத்தில் உள்ள வீடுகளில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நிக்கில் (வயது 23) என்ற வாலிபர் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு முரளிதரனின் சலவைப் பட்டறையில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார்.

 

இந்நிலையில் நேற்று நிக்கில் வேலைக்கு செல்லாததால் உடன் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் அவரது அறைக்கு வந்தனர். அப்போது அவரது அறையில் நிக்கில் உடல் தீப்பிடித்து எரிந்த நிலையில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நிக்கில் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

மேலும் நிக்கில் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். நிக்கிலுடன் உடன் வேலை பார்க்கும் சக தொழிலாளர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் சந்தேகம் மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியான பிறகே கொலைக்கான உண்மை நிலவரம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர். .வடமாநிலத் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.