Skip to main content

டெல்லியில் முகாமிட்டு மத்திய அமைச்சர்களை சந்தித்து வரும் புதுச்சேரி அமைச்சர்கள்!

Published on 25/07/2019 | Edited on 25/07/2019

 

புதுச்சேரி சட்டசபையில் 2019-2020-ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி துறைவாரியான ஆய்வு கூட்டங்களை முதல்வர் நாராயணசாமி மேற்கொண்டு வந்தார். அதையடுத்து புதுச்சேரி அரசின் பட்ஜெட் தொகையை இறுதி செய்து திட்ட வரையரையை மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைப்பதற்காக, மாநில திட்டக்குழு கூட்டம் கடந்த 13-ஆம் தேதி ஆளுநர் கிரண்பேடி தலைமையில்  நடைபெற்றது. அந்த கூட்டத்தில் ரூ.8,425 கோடிக்கு திட்ட வரையரை தயார் செய்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

 

p

 

இந்நிலையில் பட்ஜெட்டிற்கு ஒப்புதல் பெறுவதற்காக முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்களுடன் டெல்லியில் முகாமிட்டுள்ளார்.

 
அங்கு அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, வைத்திலிங்கம் எம்பி ஆகியோருடன் மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசி வருகின்றனர். மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வாரை சந்தித்து புதுச்சேரியில் புதிய பல்நோக்கு இ.எஸ்.ஐ மருத்துவமனை கட்டுமான பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என வலியுறுத்த, அதற்கான அடிக்கல் நாட்டு விழா அடுத்த மாதம் நடைபெறும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

தொடர்ந்து, போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து,  விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை பணிகளை விரைவு படுத்த வேண்டும், புதுவையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தீர்க்க ராஜீவ், இந்திரா சதுக்கங்களில் மேம்பாலம் கட்ட நிதி உதவி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். அதற்கு சுற்றுலா பயணிகள் நலனை கருத்தில் கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும், அது தொடர்பான விரிவான திட்ட அறிக்கை  அனுப்பி வைத்தால் தேவையான உதவியை செய்வதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

மத்திய உள்துறை இணையமைச்சரிடம், மாநில அந்தஸ்து கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி யதுடன், புதுச்சேரிக்கான நிதி உதவி கடன் தள்ளுபடி போன்றவற்றையும், சுற்றுலாத்துறை அமைச்சர் பிரஹலாத் சிங் பட்டேலிடம் வார இறுதி நாள் சுற்றுலா என்பதனை மாற்றி, வாரம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வதற்கான சுற்றுலா தலமாக புதுச்சேரியை மாற்றுவதற்கு உதவியளிக்க கேட்டுக்கொண்டனர். மேலும் சில அமைச்சர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் மோடி பிறந்தநாள் வேலையின்மை தினம்” - புதுச்சேரி இளைஞர் காங்கிரஸ்  

Published on 17/09/2023 | Edited on 17/09/2023

 

“Prime Minister Modi Birthday Unemployment Day” - Puducherry Youth Congress

 

பிரதமர் மோடி பிறந்தநாளை வேலையின்மை தினமாக கடைப்பிடித்து புதுச்சேரி இளைஞர் காங்கிரஸார் நூதன கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

 

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் இன்று (செப்.17ம் தேதி) பாஜகவினரால் கொண்டாடப்பட்டது. இவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட ஏராளமானோர் தங்களது வாழ்த்தை தெரிவித்தனர். 

 

இந்நிலையில், புதுச்சேரி இந்திரா காந்தி சிலை முன்பு திரண்ட புதுச்சேரி இளைஞர் காங்கிரஸார், கோஷங்களை எழுப்பினர். மேலும், டீ, பக்கோடா, சமோசா ஆகியவற்றை விற்று தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். 

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, “பா.ஜ.க. அரசு ஜி20 மாநாட்டுக்கு ரூ. 4000 கோடி, புதிய நாடாளுமன்ற கட்ட ரூ. 20,000 கோடி என செலவு செய்துவிட்டு, நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்காமல்; தனது நண்பர் அதானிக்கு சலுகை வழங்குகிறது” என்று பேசினார். 

 

 

Next Story

73 பவுன் நகையை திருடி மோசடி செய்த கூட்டுறவுச் சங்க பொறுப்பாளர்

Published on 20/05/2023 | Edited on 20/05/2023

 

Cooperative society manager who stole 73 pounds of jewelry and cheated

 

புதுச்சேரி கொம்பாக்கத்தில் உள்ளது தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம். இந்தச் சங்கத்தில் கொம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் பலர் தங்கள் தங்க நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளனர். 

 

இதனிடையே கூட்டுறவு கடன் சங்கத்தில் வருடாந்திர தணிக்கை முறையாக மேற்கொள்ளப்படவில்லை எனவும், முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து சங்க தலைவர் எம்பெருமாள் கடந்த 16ஆம் தேதி தணிக்கையாளர் இந்திரமோகனுடன் சங்க நிர்வாக பொறுப்பாளரும், முதுநிலை எழுத்தருமான பாப்பான்சாவடியை சேர்ந்த கதிரவன்(48) என்பவரிடம் சங்க கணக்கு வழக்குகளை தணிக்கை செய்யக் கூறினர்.

 

இதற்கு கதிரவன் சரியான பதில் அளிக்காததுடன் மறுநாள் 17ஆம் தேதி பணிக்கு வராமல் விடுப்பு எடுத்துக் கொண்டார். இதனால் சந்தேகமடைந்த எம்பெருமாள், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரை சந்தித்து சங்க கணக்குகளை ஆய்வு செய்ய வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து துணைப் பதிவாளர் தலைமையில் தணிக்கையாளர்கள் இந்திராமோகன், குப்புராமன், சிவசங்கர், திருநாவுக்கரசு, சந்தோஷ் குமார் அடங்கிய குழுவினர் சங்க பொறுப்பாளர் கதிரவனை சந்தித்து ஆய்வுக்கு அழைத்தனர். ஆனால் கதிரவன் ஆய்வுக்கு வர மறுத்து, நகை பாதுகாப்பு பெட்டகத்தின் சாவியை மட்டும் கொடுத்து அனுப்பினார்.

 

துணைப் பதிவாளர் முன்னிலையில் நகை பெட்டகம் திறந்து தணிக்கை செய்யப்பட்டது. அப்போது நகை கடன் கணக்குகளில் 198 கணக்குகள் மட்டுமே இருந்தன. அதிலும் 18 நகை கணக்கில் நகைகள் இல்லாமல் வெறும் பைகள் மட்டுமே இருந்தன. அவற்றில் இருந்த ரூபாய் 33 லட்சம் மதிப்புள்ள 588.50 கிராம் தங்க நகைகள் மாயமாகி இருந்தன. இதுகுறித்து சங்க நிர்வாக பொறுப்பாளர் கதிரவன் மீது சங்க தலைவர் எம்பெருமாள் முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 

போலீசார் மோசடி பிரிவில் வழக்கு பதிவு செய்து கதிரவனிடம் விசாரணை செய்தனர். விசாரணையில் கதிரவன் கடந்த பல ஆண்டுகளாக ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். கொரோனா காலக்கட்டத்தில் ஏலச்சீட்டில் நஷ்டம் ஏற்பட்டதால் கூட்டுறவு சங்கத்தில் வைக்கப்பட்ட நகையை எடுத்து வேறு இடங்களில் அடமானம் வைத்து செலவு செய்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து கதிரவனை கைது செய்த போலீசார் நகைகளை அடமானம் வைக்க கதிரவனுக்கு உதவியவர்களை தேடி வருகின்றனர்.