Skip to main content

அமைச்சர் ஆட்களுக்கு பாண்டிச்சேரி மதுபானபாட்டில் சப்லை... - கைதான பெண்கள் வாக்கு மூலம்!!

Published on 23/10/2018 | Edited on 23/10/2018

நாமக்கல் மாவட்ட மதுவிலக்கு போலீசார் அடங்கிய தனிப்படையினர் 22.-ஆம் தேதி  மற்றும் 23ந் தேதி மோகனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வளையப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, குமாரபாளைையத்தை சேர்ந்த மணி, சாந்தி ஆகியோர் திருச்சியிலிருந்து ஈரோடு செல்லும் பேருந்தில் 40 பாண்டிச்சேரி  ஃபுல்  பிராந்தி பாட்டில்களை கொண்டு வந்துள்ளனர். 

 

wine

 

அதேபோல் இராசிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆண்டலூர் கேட் பேருந்து நிறுத்தத்தில் மதுவிலக்கு தொடர்பாக வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, தெய்வானை , ஈஸ்வரி, மல்லிகா (எ) பழனியம்மாள் ஆகியோர்  ஆத்தூரிலிருந்து ஈரோடு செல்லும் அரசு பேருந்திலும், சுமார் அறுபதாயிரம் ரூபாய் மதிப்புள்ள 163 பாண்டிச்சேரி மதுபான பாட்டில்களை கடத்தி வந்தனர். மொத்தம் 203 பாட்டில்கள் - 133 லிட்டர் சட்டவிரோதமாக கடத்திவந்து குமாரபாளையம் பகுதிகளில் விற்பனைக்கு கொண்டு சென்றுள்ளார்கள்.

 

wine

 

wine

 

மேற்படி ஐந்து பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீஸ் விசாரித்த போது குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் உள்ள அ.தி.மு.க. பிரமுகர்களுக்கு இந்த மதுபாட்டில்களை கொண்டு செல்வதாகவும், வாரம் ஒருமுறை கட்சி நிர்வாகி ஒருவர் பாண்டிச்சேரியில் இந்த மதுபாட்டில்களை வாங்கி எங்களிடம் கொடுத்து அனுப்புவார் நாங்கள் பேருந்து மூலம் கொண்டு வந்து பள்ளிபாளையத்தில் சேர்ப்போம் எங்களுக்கு பயண செலவு போக ஒரு நபருக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பார்கள் எனக் கூறியிருக்கிறார்கள் அப்பெண்கள். இந்த தொகுதி அமைச்சர் தங்கமணியின் தொகுதி ஆகும். பாண்டிச்சேரியிலிருந்து மது பாட்டில்கள் பர்ச்சேஸ் செய்தது அமைச்சருடன் நெருங்கிய அ.தி.மு.க. நிர்வாகிகள் என்பதால் கைதான பெண்கள் கொடுத்த தகவலை மறைத்துவிட்டு அவர்களை சிறைக்கு அனுப்பியது நாமக்கல் போலீஸ். 

சார்ந்த செய்திகள்

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

குடிப்பழக்கத்தை தட்டிக்கேட்ட பாட்டியை கொன்ற பேரன்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Grandson attack grandmother for drunkenness

குடிப்பழக்கத்தை கண்டித்த பாட்டியை பேரனே கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ளது சாரூர். இந்த பகுதியில் வசித்து வந்தவர் தாசம்மாள் (80). இவருடைய மகன் புஷ்பராஜ் என்பவருக்கு அஜித் மகன் இருக்கிறார். அவருக்கு வயது 23.

குடும்ப பிரச்சனை காரணமாக புஷ்பராஜின் மனைவியை பிரிந்து சென்று விட்டார். இதனால் புஷ்பராஜூம் அவருடைய மகன் அஜித்தும் தாசம்மாளுடன் வசித்து வந்தனர். அண்மையில் உடல்நிலை சரியில்லாமல் புஷ்பரஜ் இறந்து விட்டார் .

அதன் பிறகு பாட்டியுடன் அஜித் மட்டும் வசித்து வந்தார். அந்த பகுதியில் பெயிண்டிங் வேலைகளுக்கு சென்று வந்த அஜித் குடிப்பழக்கத்திற்கு நாளடைவில் அடிமையாகி விட்டார். இந்நிலையில் பாட்டி  தாசம்மாள் பெயரில் உள்ள 15 சென்ட் நிலத்தை தன்னுடைய பெயருக்கு எழுதி வைக்கும்படி அஜித் மது அருந்திவிட்டு ரகளை செய்து வந்துள்ளார்.

வழக்கம்போல் நேற்று இரவு 11 மணிக்கு மது குடித்துவிட்டு வந்த அஜித் பாட்டி தாசதாசம்மாளிடம் இது தொடர்பாக சண்டை போட்டுள்ளார். அப்பொழுது பாட்டி தட்டி கேட்டுள்ளார். மதுபோதையில் இருந்த அஜித் தாசம்மாளை கீழே தள்ள, சுவரில் தலை மோதி சம்பவ இடத்திலேயே தாசம்மாள் உயிரிழந்தார். தான் தாக்கியதால் பாட்டி இறந்ததை அறிந்துகொண்ட அஜித் பயத்தில் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.