Skip to main content

புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்!!

Published on 14/11/2018 | Edited on 14/11/2018

 

Pondicherry fishermen do not go to sea

 

கஜா புயல் எச்சரிக்கையை தொடர்ந்து புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அபிஜித் விஜய் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

 

மேலும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் மேடான பகுதிகளுக்கு செல்ல வேண்டும். காற்றின் வேகம் அதிகரித்தால் வெளியே வர வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

 

பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளது எனவே பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம் எனவும் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அபிஜித் விஜய் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்