Advertisment

புதுச்சேரி, கடலூரில் முக்கிய கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்...

தி.மு.க, காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் புதுச்சேரி மக்களவைத் தொகுதி வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் சபாநாயகர் வே.வைத்திலிங்கம், புதுச்சேரி மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான அருணிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது காங்கிரஸ் மாநில தலைவர் நமச்சிவாயம், தி.மு.க மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ, கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் உடனிருந்தனர்.

Advertisment

puduchery

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

அ.தி.மு.க தலைமையிலான கூட்டணிகள் சார்பில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் கே.நாராயணசாமி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

pudhuchery

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

அப்போது என் .ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ரங்கசாமி, அதிமுக மாநில செயலாளர் புருஷோத்தமன், அன்பழகன் எம்எல்ஏ, பஜாக மாநில தலைவர் சாமிநாதன், எம்.எல்.ஏ. ஆகியோர் உடனிருந்தனர்.

மக்கள் நீதி மையத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிடும் சுப்பிரமணியமும் தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார்.

கடலூர்:

அதிமுக கூட்டணி சார்பில் கடலூர் தொகுதியில் போட்டியிடும் பா.ம.க வேட்பாளர் மருத்துவர் கோவிந்தசாமி கடலூர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான அன்புச்செல்வனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

pudhuchery

அப்போது அ.தி.மு.க எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன், தே.மு.தி.க மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து, பா.ஜ.க மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

elections pondychery
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe