ADVERTISEMENT
ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தமிழ் மொழிக்கு பிரதமர் செய்த நன்றியை மறப்பது ஏற்புடையதல்ல எனக்கூறியுள்ளார். மேலும் அவர், உலகின் தொன்மையான மொழி தமிழ் எனக்கூறிய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழர்கள் யாரும் நன்றி தெரிவிக்கவில்லை. தமிழியக்க விழாவில் பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
ADVERTISEMENT
தமிழ் வளராமல் இருப்பதற்கு ஆன்மிக தமிழை பிந்தள்ளியதுதான் காரணம் என தோன்றுகிறது எனக்கூறிய அவர், ஆன்மிக தமிழை வளர்க்க சென்னை பல்கலைக்கழக்கத்தில் அதற்கென இருக்கை அமைத்தால் ரூ.10 இலட்சம் நிதி தர தயார் எனவும் கூறியுள்ளார்.
Show comments