Advertisment

நடிகர் விஜய்க்கு நானே நேரில் சென்று மாலை அணிவித்து வரவேற்பேன்: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

vp

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

Advertisment

நடிகர் விஜய், தான் முதல்வரானால் உண்மையாக இருப்பேன். நடிக்க மாட்டேன் என்று கூறுகிறாரே? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிதற்கு,

Advertisment

எல்லோரும் எம்ஜிஆர் ஆகவும், ஜெயலலிதா ஆகவும் முடியாது. இன்று மக்களிடம் செல்வாக்கு பெற்ற நடிகராக இருப்பவர் ரஜினி மட்டும்தான்.

யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். எந்த துறையை சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம். பலர் பத்திரிகை மற்றும சினிமா துறையில் இருந்து பாராளுமன்ற உறுப்பினராக உள்ளனர்.

ஏதோ தமிழகம் புறப்போக்கு நிலம்போல் நாதியில்லாமல் கிடப்பது போன்று சிந்தனையுடன் உள்ளே வரக்கூடாது.

லஞ்சம் வாங்குபவர்கள் என்று குறிப்பிட்டு பொத்தாம் பொதுவாக கூறக்கூடாது. அடிப்படி யாரும் இருந்தால் அவர்களை குறிப்பிட்டு காட்ட வேண்டும். அவ்வாறு கூறினால் நடிகர் விஜய்க்கு நானே நேரில் சென்று மாலை அணிவித்து வரவேற்பேன் என்றார்.

Pon Radhakrishnan vijay
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe