Skip to main content

சென்னை புறப்பட்ட பொம்மனும் பெள்ளியும்

Published on 14/03/2023 | Edited on 14/03/2023

 

 Pomman Belli departed from Chennai

 

உலக அளவில் சினிமா துறையின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான ஆஸ்கர் விருதை சிறந்த ஆவணக் குறும்படம் என்ற பிரிவில் 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' படம் பெற்றது. இது தமிழ்நாட்டில் முதுமலை பகுதியில் ஒரு குட்டி யானைக்காக தங்களது வாழ்வை அர்ப்பணித்த பொம்மன், பெள்ளி என்ற இரு பழங்குடிகளைப் பற்றிய கதை.

 

கடந்த 2019 ஆம் ஆண்டு ஓசூர் வனப்பகுதியிலிருந்து தாயைப் பிரிந்த குட்டி யானை பொம்மி, முதுமலை யானைகள் முகாமுக்கு அழைத்து வரப்பட்டது. இந்த குட்டி யானைக்கு பழங்குடி இனத்தை சேர்ந்த பொம்மன் மற்றும் அவரது மனைவி பெள்ளி ஆகியோர் பாகனாக இருந்து தங்களது பிள்ளை போன்று வளர்த்து வந்தனர். குட்டி யானைக்கும் தம்பதியினருக்கும் இடையே ஏற்பட்ட பாசப்பிணைப்பினை 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' என்ற பெயரில் ஊட்டியைப் பூர்விகமாகக் கொண்ட ஆவணப்பட இயக்குநர் கார்த்திகி இயக்கியிருந்தார். இந்தப் படம் பல்வேறு சர்வதேச விருதுகளை வென்றிருந்த நிலையில், இறுதியாக ஆஸ்கர் விருதையும் வென்றது.  

 

பல்வேறு தரப்புகளில் இருந்து படக்குழுவினருக்கும் பொம்மன் மற்றும் அவரது மனைவி பெள்ளி ஆகியோருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் பொம்மன் பெள்ளி தம்பதியினரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை சந்திக்க இருக்கிறார். இதற்காக பொம்மன் தர்மபுரி மாவட்டத்திலிருந்து சென்னைக்கு புறப்பட்டார். அதேபோல் பொம்மனின் மனைவி பெள்ளி முதுமலையிலிருந்து சென்னைக்கு புறப்பட்டுள்ளார். கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் முகமது உள்ளிட்ட அதிகாரிகள் அவரை வழி அனுப்பி வைத்தனர். முதுமலை மற்றும் டாப்ஸ்லிப் முகாம்களில் பணியாற்றும் 10 பாகன்களுக்கும் பாராட்டு விழா நடைபெற உள்ளது. அனைத்து பாகன்களுக்கும் தலா ஒரு லட்ச ரூபாய் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

யானையை சுட்டுக்கொன்ற விவசாயி கைது

Published on 31/10/2023 | Edited on 31/10/2023

 

Farmer arrested for shooting elephant

 

ஓசூர் அருகே காட்டு யானையை விவசாயி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வனத்துறை கைது செய்துள்ளது.

 

ஓசூர் ஜவளிகிரி வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியை சேர்ந்தவர் விவசாயி முதுமல்லேஷ். இவர் தனது விவசாய தோட்டத்தில் ராகி பயிரிட்டிருந்த நிலையில் காட்டு யானை ஒன்று வந்து அடிக்கடி பயிர்களை சேதப்படுத்தியுள்ளது. இதனால் அதிருப்தியில் இருந்த விவசாயி முதுமல்லேஷ், மீண்டும் தோட்டத்திற்கு வந்த காட்டு யானையை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார். வனத்துறை நடத்திய விசாரணையில், தான்தான் யானையை சுட்டுக்கொன்றதாக விவசாயி முதுமல்லேஷ் வாக்குமூலம் கொடுத்ததைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

காட்டு யானை தாக்கி மாற்றுத்திறனாளி இளைஞர் உயிரிழப்பு

Published on 27/09/2023 | Edited on 27/09/2023

 

wild elephant attacked incident

 

காட்டு யானை தாக்கி மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் நீலகிரியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்தும், வனத்துறை உடனடியாக காட்டு யானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

நீலகிரி மாவட்டம் சேரம்பாடி கோரஞ்சால் பகுதியைச் சேர்ந்தவர் குமார். மாற்றுத்திறனாளி இளைஞரான இவர் மாலை வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று குமாரை தாக்கியது. இதில் யானை மிதித்ததில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இறந்தவர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும்; சோரம்பாடி பகுதியில் யானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என குமாரின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்