Skip to main content

“வேர்களை தேடும் விழுதுகள்..! மரபுகளை மீட்டெடுக்க புதிய முயற்சி..!!”

Published on 22/11/2018 | Edited on 22/11/2018


   
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வழக்கத்தில் இருந்த பழங்கால மரபுகள், பழைமையான கோவில்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் ஈடுபட்டுள்ளது.  

   

culture


“மரபுநடை”என்ற பெயரில் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவரும் பள்ளி ஆசிரியருமான ராஜகுரு. அக்காலத்தில் இருந்த பழக்க வழங்கங்கள், சமய வழிபாட்டு முறைகளையும் இக்கால மாணவர்கள் அறிந்து கொள்ள, மாதத்தில் ஒரு நாளை தேர்வு செய்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பழங்கால மரபுகளை பற்றி, அந்த ஊர்களுக்கே அழைத்து சென்று இவர் விளக்கி வருகிறார்.  அந்த வகையில் 10-வது மரபுநடை, ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூரிலும், தூத்துக்குடி மாவட்டம் வேம்பாரிலும் அண்மையில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் தொல்லியல் ஆய்வாளர் ராஜகுரு, நரிப்பையூரில் 13-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு இப்போது பராமரிப்பின்றி காணப்படும் சிவன் கோவில் பற்றி விளக்கினார். அதேபோல், நரிப்பையூரில் உள்ள 3 மாலைக்கோவில்கள் பற்றியும், வேம்பாரில் உள்ள ஒரு மாலைக்கோவில் பற்றியும் மாணவர்களுக்கு தெளிவாக விளக்கம் அளித்திருக்கிறார்.

 

culture

    
இதுபற்றி வரலாற்று ஆய்வாளர் ராஜகுரு , “மாலைக்கோவில் என்றால், போர், பூசல் போன்ற இன்னபிற காரணங்களால் இறந்து போன பெண் நினைவாக 4 நடுகல் நட்டு அதன் மேல் கோவில் எழுப்புவது. அதேபோல், நிரை கவர்தல், மீட்டல், பன்றி, யானையுடன் சண்டையிடுதல் போன்ற காரணங்களால் இறந்துபோன கணவனுடன் உடன்கட்டை ஏறிய பெண்ணுக்கு கோவில் கட்டி வழிபாடு நடத்துவதற்கு பெயர் மாலைக்கோவில். ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் இன்றும் இந்த மாலைக் கோவில்களை பார்க்கலாம்”. என்றவர் தொடர்ந்து, “வட தமிழகத்தில் தீப்பாய்ஞ்ச அம்மன், சதிகல் என்று இந்த கோவில்கள் அழைக்கப்படுகிறது. தென் தமிழகத்தில் இதற்கு மாலையடி, மாலைக்காரி, சீலைக்காரி என்று அழைப்பர். பெண் இறந்த பிறகு சாமியாக வழிபட்டுள்ளனர் அக்காலத்தில். நரிப்பையூரில் நாயக்கர் மற்றும் பாண்டியர் காலத்து மாலைக்கோவில்கள் இன்னமும் வரலாற்றை சுமந்து நிற்கும் எச்சமாய் நிற்கிறது. வேம்பாரில் உள்ள மாலைக்கோவில் என்பது, கணவனை நாகம் தீண்ட அவருடன் சேர்ந்து உயிர்நீத்த பெண்ணின் கதையை சுமந்து நிற்கிறது” என்கிறார்.

 

culture

    
தொல்லியல்துறை மற்றும் சுற்றுலா துறை முற்றிலும் கைவிடப்பட்ட இந்த கோவில்களையும், மரபுச் சின்னங்களையும் அரசு பாதுகாத்தால் நன்றாக இருக்கும். பழைமையான மரபுகள் பாதுகாக்கப்படுவது அவசியம்.!

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாகிஸ்தானில் பழங்கால இந்து கோவில் இடித்து தகர்ப்பு!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Demolition of a Historic Hindu temple in Pakistan!

இந்தியா - பாகிஸ்தான் பிரிவதற்கு முன்னாள், ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையொட்டி, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ‘கைபர் கோவில்’ என்ற பழங்கால இந்து கோவில் ஒன்று செயல்பட்டு வந்தது. அதன் பின்பு, 1947ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததற்குப் பின்னால், அங்குள்ள சிறுபான்மையின மக்களான இந்து மக்கள், இந்தியாவிற்கு புலம் பெயர்ந்து வந்தனர்.

இதனால், 1947ஆம் ஆண்டு முதல், அந்த இந்து கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் உள்ளே சென்று வழிபடவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, அந்த கோவில் மூடப்பட்டுள்ளது. காலப்போக்கில் இந்த கோவிலில் உள்ள செங்கற்கள் ஒவ்வொன்றாக விழுந்து, அந்த கோவில் சிதிலமடைந்து காட்சியளித்துள்ளது.

இந்த நிலையில், அந்தப் பழமையான இந்து கோவில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு முழுமையாக இடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கோவில் அமைந்திருந்த இடத்தில் புதிதாக வர்த்தக வளாகம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து, பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கூறியதாவது, ‘முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மத முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று கட்டிடங்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பை உறுதி செய்வது மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளின் பொறுப்பாகும்’ என்று கூறியுள்ளது.

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.