Skip to main content

ஒ.என்.ஜி.சி எண்ணெய் கிணற்றில் விஷவாயு வெளியேறும் அபாயம்;திருவாரூர் பதற்றம்

Published on 03/11/2019 | Edited on 03/11/2019

திருவாரூர் மாவட்டம் களப்பாள் பகுதியில் ஒ.என்.ஜி.சி எண்ணெய் கிணற்றில் விஷவாயு வெளியேறும் அபாயம் உள்ளதாக பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுசெயலாளர் பி.ஆர்.பாண்டியன் காப்பாள் பகுதியில் பேரழிவை ஏற்படுத்தும்  ஒ.என்.ஜி.சி கிணறுகளை நேரில் பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் கூறுகையில்,"திருவாரூர் மாவட்டம் கோவில் களப்பால் பகுதியை மையமாக வைத்து கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஒ.என்.ஜி.சி நிறுவனம் கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது.

 

Pollution risk at ONGC oil well; Thiruvarur tension

 

இந்நிலையில் சாளுவனாறுக்கு தென்பகுதிகளில் களப்பாள், கோவில்களப்பாள், நாராயணபுரம் களப்பாள், அக்கரைக் கோட்டகம் உள்ளிட்ட கிராமங்களில் குடியிருப்புகளின் அருகிலும், களப்பாள் மேல்நிலைப் பள்ளி வளாகத்திலும் தோண்டப்பட்ட கிணறுகளில் கச்சா எண்ணெய்  எடுத்துவந்த நிலையில் திடீரென கடும் விஷவாயு வெளியேற துவங்கியதால் கச்சா எண்ணெய் எடுக்கும் பணி நிறுத்தப்பட்டு தற்காலிகமாக மூடப்பட்டது. அதை நிரந்தரமாக மூடப்படாததால் என் எந்நேரமும் விஷ வாயு வெடித்து வெளியேறி பெரும் விபத்து ஏற்படும் நிலை உள்ளது

இதனையறிந்து மக்கள் அச்சத்திற்கு ஆளான நிலையில் ஒ.என்.ஜி.சி நிறுவனம் மற்றும் அப்பகுதி உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், விவசாயிகள் முன்னிலையில் கடந்த 2010ம் ஆண்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையில் அக்கிணறுகளில் விஷவாயு வெளியேறியதால் தற்காலிகமாக மூடப்பட்டதாகவும், பேரபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் உடனடியாக சிமெண்ட் கரைசல் மூலம் கிணறு முழுமையும் நிரந்தரமாக மூடிவிடுவதாக எழுத்துப்பூர்வமாக ஒ.என்.ஜி.சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால் இது நாள் வரையில் அடைப்பதற்கு எந்தவொரு நடவடிக்கையும் மேற்க்கொள்ளவில்லை. இதனால் எந்த நேரத்திலும் விஷவாயு வெளியேறி பேராபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே தமிழக அரசு பேரிடர் மேலாண்மை துறையுடன் இணைந்து மக்களை பேரிடரிலிருந்து பாதுகாப்பதற்கு முன்வரவேண்டும்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒ.என்.ஜி.சி நிறுவன கிணறுகளின் பாதிப்புகள் குறித்து உயர்மட்டகுழு அமைத்து ஆய்வு செய்திட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தப்போகிறேன்," என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் ஆயுதங்கள்; 4 பேர் கைது

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
BJP district executive's car; 4 arrested

திருவாரூரில் பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்த நிலையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவாரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நின்றுகொண்டிருந்த பாஜக மாவட்ட துணைத் தலைவர் சதா.சதீஷ் என்பவரது சொகுசு காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக காரை சோதனை செய்த போலீசார் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். காரில் ஆயுதங்களுடன் இருந்த தினேஷ், தேவராஜ், விக்டர், பாரதி செல்வம் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் ஆயுதங்கள் இருந்த சொகுசு காரையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.