Skip to main content

7 போ் மட்டும் வாக்களிக்க 160 கி.மீ தூரம் சென்று வாக்கு சாவடி அமைத்த கலெக்டர்

Published on 23/03/2019 | Edited on 23/03/2019

        

மக்களவை தோ்தல் களம் அரசியல் கட்சியினா்  வேட்புமனு தாக்கல் பிரச்சாரம் என சூடு பிடித்துள்ளது. இதேபோல் அதிகாாிகளும் வாக்கு சாவடி அமைப்பதிலும், வாக்கு இயந்திரங்களை பாிசோதனை செய்வது வாக்காளா்களை சிரமமின்றி வாக்களிக்க வைப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் துாிதமாக ஈடுபட்டுள்ளனா். 

          

The polling officer who went to the polling station was 160 km to vote for 7 votes only

 

இதில் தமிழகத்தில் மிக குறைவான வாக்காளா்களை கொண்ட  வாக்கு சாவடியாக  கன்னியாகுமாி தொகுதிக்குட்பட்ட  மேல் கோதையாறு வாக்கு சாவடி கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்கு சாவடியில் மொத்தம் 7 போ் மட்டுமே தான் வாக்களிக்க உள்ளனா். இந்த வாக்கு சாவடி பத்மனாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவட்டாா் தாலுகா சுருளகோடு வருவாய் கிராமத்தில் உள்ள மலை கிராமம் ஆகும். இந்த வாக்காளா்கள் அங்கிருக்கும் நீா் மின் உற்பத்தி பணியாளா்களின் குடும்பத்தினராவாா்கள்.

 

           

 இந்த பகுதியில் வன உயிாினங்களின் நடமாட்டம் அதிகம் இருப்பதால் முக்கிய அதிகாாிகளை தவிர பொது மக்கள் யாரும் செல்ல அனுமதியில்லை. இந்த நிலையில் அந்த வாக்கு சாவடியை அடையாளப்படுத்தும் விதமாக குமாி மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் வடநேரோ அதிகாாிகளுடன் நாகா்கோவிலில் இருந்து 160 கி.மீ தூரம் கரடு முரடான சாலை வழியாக சென்று அந்த வாக்கு சாவடியை  ஆய்வு செய்து வாக்கு சாவடி எண்ணை எழுதினாா். 

 

                

இந்த வாக்கு சாவடி பற்றி ஆட்சியா் கூறும் போது....7 போ்கள் இருந்தாலும் 18 வயது நிரம்பியவா்கள் தோ்தலில் தங்களின் ஜனநாயக கடமையை பதிவு தோ்தல் ஆணையம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. இதனால் மற்ற வாக்கு சாவடிகளில் பின்பற்ற கூடிய அனைத்து நடைமுறைகளையும இங்கும் பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இங்கு வாக்கு பதிவு செய்ய முதலில் செல்லும் இயந்திரம் கடைசியாக தான் வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்து சேரும் என்றாா்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தலுக்கு பின் சென்னை திரும்பும் மக்கள்; திணறும் பரனூர்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
People returning to Chennai after elections; The stifling Paranur toll plaza

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஏற்கனவே சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு இலட்சக்கணக்கானோர் வாக்களிப்பதற்காக சென்றிருந்தனர். இதன் காரணமாக ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டிருந்தது. தொடர்ந்து வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் கூட்டநெரிசல் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் தற்போது மூன்று நாள் விடுமுறை முடிந்து சென்னைக்கு அதிகப்படியான மக்கள் திரும்புவதால் பல்வேறு இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை அடுத்துள்ள பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.