Advertisment

பொள்ளாச்சி பாலியல் வழக்கு! - மூவரின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

pollachi issues coimbatore mahila court order

Advertisment

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியில் பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்து, ஆபாசமாகப் படம் எடுத்து மிரட்டிய வழக்கில் ஏற்கனவேதிருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்த், மணிவண்ணன், சதீஸ் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2019- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற இந்தக் கொடூர சம்பவம் நாட்டையே உலுக்கியது. அரசியல் கட்சித் தலைவர்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும், பொள்ளாச்சி பாலியல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றவேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தனர். அதைத் தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட சி.பி.ஐ. மேலும் மூன்று பேரை அதிரடியாகக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையிலடைத்தது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று (17/02/2021) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கைதாகி நீதிமன்றக் காவலில், சிறையில் உள்ள ஹேரன் பால், பாபு, அருளானந்தம் ஆகிய மூவரின் நீதிமன்றக் காவலை மார்ச் மாதம் 3- ஆம் தேதி வரை நீட்டித்து கோவை மாவட்ட மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

mahila court Coimbatore issues pollachi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe