Advertisment

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து கண்ணில் கருப்புத்துணி கட்டி போராட்டம்

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் கண்ணில் கருப்புத்துணி கட்டிக்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

Advertisment

கோவை இடையர் பாளையத்தை சேர்ந்த ரஜினி தேவராஜன் என்பவர் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு மிக விரைவில் தண்டனை பெற்று தர வேண்டும் என்று கண்ணில் கருப்பு துணி கட்டிக்கொண்டும் தனது இருசக்கர வாகனத்தில் பேனர் கட்டியும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார்.

District Collectorate, Coimbatore

பெண்களுக்கு உரிய பாதுகாப்பில்லை எனவும் பொள்ளாச்சி சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்து பகுதிக்கும் செல்ல இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்

.

Advertisment

தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள சூழலில் அவர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கருப்பு சட்டை அணிந்து பிரச்சார போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

Collectorate District Coimbatore issue pollachi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe